உதகை, டிச.23- நேர்மையான தூய்மைப் பணி ஒப் பந்ததாரர்களை பணியமர்த்த வேண் டும் என கூடலூர் நகராட்சி அலுவலகத் தில் சிபிஎம், திமுக, அதிமுக உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், திங்களன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நீலகிரி மாவட்டம், கூடலூர் நக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை களை அப்புறப்படுத்தும் பணியில் (அக் ஷயா அசோசியேட்ஸ்) என்கிற நிறுவ னம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடு வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அரசின் வரிப்ப ணத்தை விரயம் செய்து முறைகேட் டில் ஈடுபடக்கூடிய ஒப்பந்ததாரர்களை உடனடியாக நீக்கிவிட்டு. நேர்மையாக பணி செய்யக்கூடிய ஒப்பந்ததாரர் களை பணியமர்த்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒன்பது நகர் மன்ற உறுப்பினர்கள் திங்களன்று நக ராட்சி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில், சிபிஎம், திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சுயேச்சை என கட்சி வேறுபாடின்றி 9 நகர்மன்ற உறுப்பினர் கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் கூடலூர் நகர் மன்றத் தில் பரபரப்பான சூழல் நிலவியது.