திருப்பூர், ஆக.17- திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகை யில் அரசுப் பள்ளிகளின் முன் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ்.லட்சுமி அண் மையில் பொறுப்பேற்றார். இதையடுத்து, மாநகரில் புகையி லைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் சிறப்பு தனிப் படை அமைக்கப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், குற்றச் சம்பவங்க ளைத் தடுக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ரயில் நிலையம், அரசு பள்ளிகள், பேருந்து நிலை யங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் காவல் துறை யினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஜெய்வாபாய் நகரவைப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 15 வேலம் பாளையம் அரசுப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.