districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஈரோட்டில் ஜி.எஸ்.லட்சுமண அய்யர் பிறந்தநாள் கருத்தரங்கம்

ஈரோடு, பிப்.19- சுதந்திர போராட்ட தியாகி ஜி.எஸ்.லட்சுமண பிறந்த நாள் கருத்தரங்கம் பிப்.22-ல் நடைபெறுகிறது. இதில், திரைக்கலை ஞர் ரோகிணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். சுதந்திர போராட்ட தியாகி ஜி.எஸ்.லட்சுமண அய்யர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் சிறப்பு மலர் வெளி யீட்டு விழா வரும் 22 ஆம் தேதி புதனன்று நடைபெறுகிறது. கோபிசெட்டிபாளையம் தக்கர்பாப பள்ளி வளாகத்தில் நடை பெறும் இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட செயலாளரும், ஓய்வு பெற்ற மாவட்ட  வருவாய் ஆய்வாளருமான எம்.அண்ணாதுரை தலைமை  ஏற்கிறார். கோபி கமிட்டி செயாளர் கே.சி.ரங்கசாமி வர வேற்கிறார். இந்நிகழ்ச்சியில் திரைக்கலைஞர் ரோகிணி பங் கேற்று சிறப்பு மலர் வெளியிட்டு கருத்துரையாற்றுகிறார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானம், சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் ஆர்.ரகுராமன், ததீஓமு மாவட்ட தலைவர் பி.பி.பழனி சாமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனு சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவை, பிப்.19- மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கோவை, குனியமுத்தூரை சேர்ந்தவர் சண்முகவேல் (45).  ஓட்டுநரான இவர், தனியாக வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள சிறுமி விளையாட வந்தபோது, குடி போதையில் இருந்த அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதனை சிறுமி அழுது கொண்டே தனது வீட் டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சண்முகவேலிடம் கேட் டுள்ளனர். இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட் டது. பின்னர்  சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண் முகவேலை கைது செய்தனர். பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அனைத்து மக ளிர் போலீசார் சண்முகவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்: சொத்துக்காக கொலை முயற்சி

சேலம், பிப்.19- சொத்து பிரச்சனையில் பழங்குடியின மக்களை கொலை செய்ய முயற்சித்தவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா, புழுதிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த பழங் குடியின கிராமம் புங்கமடுவு. இப்பகுதியில் பரமசிவம் – சின்னம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விஜய் என்கிற மகனும், ரம்யா என்கிற மருமகளும் உள்ள னர். இவர்களுக்கும் பக்கத்து காட்டுக்கார ருக்கும் தொடர்ந்து சொத்து சம்பந்தமான வழக்கு நடந்து வருகிறது. இதனிடையே ரம்யா குழம்பு வைத்துவிட்டு, வெளியே  சென்றுள்ளார். அப்போது, பக்கத்துக்காட்டு காரர், ரம்யா செய்திருந்த குழம்பில் களைக் கொல்லி மருந்தை கலக்கியதாக கூறப்படு கிறது. இதை அறியாமல் பரமசிவம், சின்னம் மாள், ரம்யா ஆகியோர் சாப்பிட்டவுடன், வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போரா டிய அவர்களை மீட்டு, வாழப்பாடி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்  சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டு, 5 நாட் கள் சிகிச்சைக்கு பின் சுமார் 4 லட்ச ரூபாய்  செலவு செய்து அவர்கள் வீடு திரும்பினர். இந்நிலையில், சொத்து பிரச்சனைக்காக உண்ணும் உணவில் விஷத்தை கலந்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. மேலும், அவர்களுக்காக ஏற்பட்ட மருத்துவ செலவு தொகையை சம் பந்தப்பட்ட குடும்பத்திலிருந்து பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

மின்கசிவால் தொலைக்காட்சி பெட்டி வெடித்தது

நாமக்கல், பிப்.19- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தீடீர் மின்கசிவால் தொலைகாட்சி பெட்டி வெடித்ததில் நல்வாய்ப்பாக பாட்டி, பேத்தி உயிர் தப்பினர். ராசிபுரத்தை அடுத்த பட்டணம் பகுதியில் உள்ள மேட்டுக்காடு அருகே பெருமாயி (60) என்பவர், தன்னுடைய மகன் சங்கர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், வெள்ளியன்று மதியம் பெருமாயி மற்றும் பேத்தி நிவி யாழினி இருவரும் தொலைக்காட்சியை பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு டிவி முழுவதும் தீ பிடித்து எரிந்தது. மேலும், தீ மளமளவென மின்இனைப்பு பெட்டி மற்றும் டியூப் லைட் ஆகியவைகள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து பதறிப்போன பெறுமாயி குழந்தையை எடுத்து கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர், அருகில் உள்ளவர்கள்  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயனைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள்ளாகவே தீ அதிகரித்து டிவி அருகே இருந்த செல்போன், மற்றும் வாட்ச், ஸ்டெபிலைசர் போன்றவையும் தீயில் கருகியது. உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களே தீயணைப்புத் துறையினர் வரும் முன்னரே தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி'

நாமக்கல், பிப்.19- நாமக்கல்லில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பேருந்து நிலையத்திலுள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர். ஆனால், சமீப காலமாக நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து சற்று குறைந்துள்ளது. நாமக்கல் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.ஆயிரத்திற்கும், முல்லை பூக்கள் கிலோ ரூ.ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன.  இதேபோல் சம்பங்கி கிலோ ரூ.160க்கும், அரளி ரூ.300க்கும், ஜாதி மல்லி கிலோ ரூ.800க்கும் விற்பனையானது. சிவராத்திரி பண்டிகை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து சற்று குறைந்து இருப்பதாலும் விலை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து

உதகை, பிப்.19- காட்டேரி பகுதியில் நிலவிய மோச மான வானிலை காரணமாக, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-வின் குன் னூர் ராணுவ கல்லூரி பயணம் நிறுத்தப் பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் தமிழ்நாட்டிற்கு வந்தார். இதன் படி, தனி விமானம் மூலம் தில்லியிலி ருந்து மதுரை வந்த அவர், அங்கு மீனாட் சியம்மன் கோவிலுக்கு சென்றார். இதன் பின் கோவை வந்த அவர் ஈஷா யோகா மையத்திற்கு சென்றார். இதைத்தொ டர்ந்து நீலகிரி மாவட்டம், குன்னூர்  வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி யில் முப்படை அதிகாரிகளுடன் கலந்து ரையாடல் மற்றும் போர் நினைவு தூணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந் தது. இதையொட்டி மாவட்டம் முழுவ தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த னர். மேலும், ராணுவ கல்லூரி வளாகம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தது. குடியரசு தலைவரை வரவேற்க மாவட்ட ஆட்சி யர் அம்ரித் மற்றும் ராணுவ அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில், குன்னூர் காட்டேரி பகுதியில் அதிகாலை முதல் மதியம் வரை கடுமையான பனிமூட்டம் நிலவி யது. இதன் காரணமாக திரௌபதி முர்மு-வின் குன்னூர் வருகை தாமதமா னது. தொடர்ந்து மோசமான வானிலை காணப்பட்டதால் பயணம் ரத்து செய் யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கோவையிலிருந்து விமான மூலம் தில் லிக்கு புறப்பட்டு சென்றார். முன்ன தாக, காட்டேரி பகுதியில் மோசமான  வானிலை காரணமாக, ஏற்கனவே ராணுவ முப்படை தலைமை தளபதியின் ஹெலி காப்டர் விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

நீர் வெளியேற்றம்: தென்படும் பாறைகள்

பள்ளிபாளையம், பிப்.19- பள்ளிபாளையம் அருகே உள்ள வெண்டிபாளையம் தடுப் பணை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காவிரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாறை திட்டுகள் வெளியே தெரி கிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த ஓடப் பள்ளி அருகே வெண்டிபாளையம் தடுப்பணை உள்ளது.  ஈரோடு மாவட்டத்தை உள்ளடக்கி வரும் இந்த தடுப்பணை யில் மின்சாரம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக அதிகளவு அணையில் நீர் திறக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில், நீர்த்தேக்க தடுப்பணையில் வருடந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றா கும். இந்தாண்டுக்கான பராமரிப்பு பணிகள், ஞாயிறன்று முதல் துவங்கி உள்ளதால், அதற்கு முன்னதாக  கதவணை யிலுள்ள அனைத்து மதகுகளும் திறந்து விடப்பட்டு, நீர் முற்றி லும் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பள்ளிபாளை யம் காவிரி ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. பள்ளி பாளையத்தில் உள்ள காவிரி  பாலத்தின் கீழே நீர்வரத்து  இல்லாததால் பாறைகள் தென்பட்டுள்ளது. மேலும், அப்பகு தியைச் சேர்ந்தவர்கள் ஆற்றுநீர் தேங்கியுள்ள குட்டையில் மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு

உதகை, பிப்.19- நீலகிரி மாவட்டத்தில் தோட்டங்களில் பணியாற்றும் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து முறையான கணக்கெடுப்பு  நடத்தி, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, முதன்மை செயலாளர்‌ தொழிலாளர்‌ ஆணை யர்‌ உத்தவின் படி, உதகை, தொழிளாளர்‌ உதவி ஆணையர்‌ (தோட்டங்கள்‌) தலைமையில், தோட்ட நிறுவனங்களில்‌ பணி புரியும்‌ வெளிமாநிலத்‌ தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப் பட்டுள்ள வசதிகள்‌குறித்து கலந்தாய்வு கூட்டம், உதகை தொழிலாளர்‌ உதவி ஆணைய (தோட்டங்கள்‌) அலுவல கத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில்‌  செயல்படும்‌ தோட்ட நிறுவனங்களில்‌ தங்கி பணிபுரியும்‌ வெளிமாநிலத்‌ தொழிலாலர்கள்‌ பற்றிய விபரங்களை, முழு மையாக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின்‌ கீழ்‌ உருவாக்கப்பட்ட வலைத்தளத்தில்‌ பதிவேற்றம்‌ செய் யப்பட வேண்டும்‌ எனவும்‌, வெளிமாநிலத்‌  தொழிலாளர் களின்‌ குழந்தைகள்‌ கல்வி கற்கும்‌ வகையில்‌ பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டியது தோட்ட நிறுவன உரிமை யாளர்களின்‌ கடமை என தெரிவிக்கப்பட்டது. மேலும், வெளிமாநிலத்‌ தொழிலாளர்கள்‌ தங்கி பணி புரியும்‌ வகையில் முறையான குடியிருப்பு வசதிகள்‌, கழிப்பிட வசதிகள்‌, மருத்துவ வசதிகள்‌ மற்றும்‌ சுகாதாரம்‌ உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என அறிவு றுத்தப்பட்டது. மேற்கண்ட வசதிகள்‌ ஏற்படுத்தி தராத உரி மையாளர்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌ என  தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த கூட்டத்தில், உதக மண்டலம் பகுதிகளில்‌ செயல்படும்‌ அனைத்து தோட்ட நிறுவ னங்களின்‌ உரிமையாளர்கள்‌ மற்றும்‌ மேலாளர்கள் பங் கேற்றனர்.

நூலக வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம்

உடுமலை, பிப்.19- உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை  நூலகம் எண் இரண்டின் மகளிர் நூலக வாசகர் வட்ட கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நூலகர் கலாவதி தலைமை வகித்தார்.  நூலக மகளிர் வாசகர் வட்ட தலைவரும், பாரதியார் நூற் றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்  விஜயலட்சுமி வரவேற்றார். நூலக வாசகர் வட்ட தலைவர்  இளமுருகு, வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன்,  துணைத்தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர். இதில், வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று உலக  மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது என்றும், அதில் மகளிர் அதிகளவு நூலகத்தை பயன்படுத்தும் வகையில்  ஊக்கப்படுத்தும் விதமாக இம்மாதம் முழுவதும் மற்றும்  மகளிர் தினம் வரை தொடர்ந்து நூலகத்தை பயன் படுத்தும் மகளிருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். உடு மலைப்பகுதியில் உள்ள சாதனை மகளிர்க்கு பாராட்டி சான்றி தழ்கள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.  முடிவில், நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார். கூட்டத் திற்கான ஏற்பாடுகளை  நூலகர்கள் பிரமோத், அஷ்ரப்  சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்திருந் தனர். ஓய்வு பெற்ற நூலகர் கணேசன் கூட்டத்தை ஒருங்கி ணைத்தார்.

திருப்பூரில் 350 கிலோ குட்கா பறிமுதல்

திருப்பூர், பிப்.19 - திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 350  கிலோ ஹான்ஸ், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ்  மற்றும் புகையிலை குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து மாநகர  காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் உத்தரவின் பேரில்  கொங்கு நகர் பகுதி உதவி ஆணையர் அணில் குமார் தலை மையில் காவல்துறையினர் தீவிர சோதனையை மேற் கொண்டனர்.  இந்நிலையில், திருப்பூர் அறிவொளி நகர் பகுதியில்  ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து அறிவொளி நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர  சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஒரு வீட்டில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான  350 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலை பொருட் களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  மேலும், ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைப்பதற்கு உடந்தையாக இருந்த வீட்டின் உரிமை யாளரான உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அபிராம் மிஸ்ரா என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் அருகே பள்ளிப் பேருந்து விபத்து

 பல்லடம், பிப்.19 – பல்லடம் அருகே பள்ளிப் பேருந்து விபத்தில் மாண வர்கள் காயமின்றி தப்பினர்.  திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூரில் ராஜா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதி களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் தங்கி  பயின்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல  சனியன்று மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவியர் பள்ளி வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் பல்லடம் மாதப்பூர் வழியாக பொங்கலூர் செல்லும்  பள்ளி பேருந்தை ஓட்டுநர் நாகராஜ் என்பவர் ஓட்டிச் சென் றுள்ளார். மாதப்பூரில் பேருந்தை நிறுத்தி குழந்தைகளை இறக்கிவிட்டு வாகனத்தை கவனக்குறைவாக பின்புறமாக இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலை யோர பள்ளத்தில் பேருந்தின் சக்கரம் சிக்கிக் கொண்டதால், இடது புறமாக பேருந்து சாய்ந்து நின்றது. இதையடுத்து குழந்தைகள் மற்றும் அதிலிருந்து ஆசிரியர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், அங்கு திரண்டு வந்து பேருந்தினுள் இருந்த மழலையர்கள் மற்றும் ஆசிரி யர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் பள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியே மீட்கப்பட்டது. மேலும் மாற்று  பேருந்து வரவழைக்கப்பட்டு குழந்தைகளையும், ஆசிரியர் களையும் அப்பகுதியினர் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

அரசு பள்ளியிலுள்ள கணினி உடைப்பு

திருப்பூர், பிப்.19- வெள்ளக்கோவிலில் அரசு மேல்நிலைப் பள்ளி அலுவலகத்தின் பூட்டை உடைத்து கணினியை சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.  திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.  இப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை  650 மாணவ, மாணவியா் பயின்று வருகின் றனர். இந்நிலையில், வெள்ளியன்று பள்ளி  முடிந்து  தலைமை ஆசிரியா் அறை, பள்ளி  அலுவலகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதி களையும் பூட்டிவிட்டு அலுவலர்கள் சென் றனர்.  இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு  மட்டும் சனியன்று சிறப்பு வகுப்புகள் இருந்தன. இதனால் தலைமை ஆசிரியர் குணசேகரன் சனியன்று காலை வந்தார். அப்போது பள்ளி அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்துள்ளது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து பார்த்தபோது அலுவலகத்தில் இருந்த கணினி, கண்காணிப்பு கேமராக்கள் உடைக் கப்பட்டு கிடந்தன. மேலும் ஹாா்டு டிஸ்க் மற்றும் பீரோக் களின் அனைத்து சாவிகளையும் காண வில்லை. மற்ற பொருள்களோ, ஆவணங் களோ திருட்டுப் போகவில்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.             

கிராமிய மின் பாதை நகரிய மின்பாதையாக மாற்றம்

அவிநாசி, பிப்.19- அவிநாசி அருகே மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததையடுத்து கிராமிய  மின் பாதை நகரிய மின் பாதையாக மாற்றப் பட்டதால், தொழில் துறையினர் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருமா பாளையம், சின்னேரிபாளையம், செம்பிய நல்லூர் ஆகிய 3 ஊராட்சிப் பகுதிகளை உள்ளடக்கியதாக செம்மாண்டம்பாளையம் மின் பாதை உள்ளது. இதில், செம்மாண்டம்பாளையம் மின்  பாதையில் இருந்த சில பகுதிகள் வடுக பாளையம் மற்றும் நேதாஜி ஆயத்த ஆடை  பூங்கா ஆகிய துணை மின் நிலையங்களுடன்  இணைக்கப்பட்டதால் நகரிய மின் பாதை யை மாற்ற தேவையான மின் இணைப்புகள் இல்லாமல் இருந்தன.  தற்போதைய கணக் கின்படி, அரசு விதிப்படி கிராமிய மின்  பாதையில் இருந்து நகரிய மின் பாதையாக  மாற்ற போதுமான மின் இணைப்புகள் உள்ளதால், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீர் பம்புகளை சீராக இயக்கவும், தொழில்  வளத்தை மேம்படுத்தவும், செம்மாண்டம் பாளையம் மின் பாதையை கிராமியம் மின்  பாதையில் இருந்து நகரியம் மின் பாதை யாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கோரிக்கையை ஏற்று கிராமிய மின் பாதையை நகரிய மின் பாதை யாக மாற்றி அறிவிக்கப்பட்டது. இதனால்  தொழில்துறையினர், மக்கள் மகிழ்ச்சிய டைந்து அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

திருநங்கையர் முன்மாதிரி விருது  விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர், பிப்.19 - திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ஆம்  தேதியன்று 2023ஆம் ஆண்டிற்கான திரு நங்கையருக்கான முன்மாதிரி விருது வழங் கப்படவுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  எஸ்.வினீத் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில், திருநங்கைகள் அரசு உதவி பெறாமல்  தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திரு நங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கை யில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பின ராக இருத்தல் கூடாது. மேலும், இவ்விரு துக்கான விண்ணப்ப விவரங்களை தமிழ் நாடு அரசின் விருதுகள் இணைய தளத்தில்  awards.tn.gov.inஇல் பதிவு செய்யப் பட்டுள்ளது.  எனவே வரும் 28ஆம் தேதிக்குள் இணை யதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவு  செய்திடவும், மேற்படி பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உயிர் தரவு (பயோ டேட்டா), பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (2),  சுயசரிதை, தனியரைப் பற்றிய விவரம்  (ஒருபக்க அளவில்), விருது பெற்றிருப் பின் அதன் விவரம், சேவை பற்றிய செயல்  முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையைப் பாராட்டி பத்திரிக்கை செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும்  இல்லை என்பதற்கான சான்று ஆகிய வற்றை தமிழில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் தயார் செய்து, கையேட்டில் இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகம், மாவட்ட சமூக நல அலுவலகம்,  அறை எண்.36இல் நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித் துத்துள்ளார்.

முத்தூரில் யோகா - இயற்கை நல்வாழ்வுக் கலைத் திருவிழா

திருப்பூர், பிப்.19 -  திருப்பூர் அருகே யோகா- நல்வாழ்வுக் கலைத் திருவிழா சனியன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம்,  முத்தூர் ஆனூர்  வித்யாலயா மேல்நிலைப்  பள்ளியில், மாவட்டங்களுக்கு இடையி லான இளம் யோகிகளின், யோகா - இயற்கை  நல்வாழ்வுக் கலைத் திருவிழா சனியன்று, அப்பள்ளி தாளாளர் கே.எஸ்.சிவசேனாபதி  தலைமையில் நடைபெற்றது. ஆயிரத் திற்கும் மேற்பட்ட இளம் மாணவ யோகிகள்  பங்கேற்றனர்.  காங்கயம் பதினென் சித்தர்கள்  யோகா இயற்கை நல்வாழ்வகமும், முத்தூர்  திருமூலர் யோகா இயற்கை நல்வாழ்வ கமும் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.  திருப்பூர், கோவை, திண்டுக்கல், கரூர்,  ஈரோடு ஆகிய மாவட்டங்களின் அரசு மற்றும்  தனியார்  பள்ளிகளிலிருந்து தகுதியான இளம் மாணாக்கர் யோகிகள் பங்கேற்றனர். இச்சிறப்பு மிக்க யோகா கலைத் திருவிழா வினை சித்தர்கள் வழி யோகா இயற்கை நல் வாழ்வகத்தின் யோகா ஆசான் காங்கயம் காளியப்பன் தொடங்கி வைத்தார்.  முத்தூர்  திருமூலர் யோகா இயற்கை நல்வாழ்வ கத்தின் யோகா ஆசான் கண்ணப்பன் வர வேற்றார். பள்ளி மாணாக்கர் மற்றும் பொது  மக்கள், நோய்களிலிருந்து விடுபட்டு, வாழ் வாங்கு வாழ, மனதில் பதிய வைக்க வேண்டிய அன்றாட வாழ்வியல் ஒழுங்கு கள் குறித்து ஈரோடு கொங்கு யோகா -  இயற்கை மருத்துவக் கல்லூரியின் துணை  முதல்வர் பேராசிரியர் மருத்துவர் ராஜ ரத்தினம் சிறப்புரையாற்றினார். இளம் யோகிகளின் திறன்களை மதிப்பீடு செய்த யோகா இயற்கை நல்வாழ்வு நடுவர்கள் மதிப்பீடு செய்தனர். ஒவ்வொரு வயது பிரிவு களிலிருந்தும் வகைக்கு மூன்று இளம் யோகிகளைத் தேர்வு செய்தார்கள். அவர் களுக்கு பதக்கங்களையும்,  சான்றிதழ்களை யும் முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன்  கல்லூரியின் முதல்வர் எஸ்.பி.சரவணன் மற்றும் ஆனூர் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர்கள் வழங்கினர். நிறைவாக பள்ளியின் யோகா ஆசான் இளங்கோ நன்றி கூறினார்.

ஆன்லைன் கடன் செயலிகள்: போலீஸ் எச்சரிக்கை'

திருப்பூர், பிப்.19 - திருப்பூர் மாவட்டத்தில் சமீப காலமாக  ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் ஏமாற்றப் படுவோர் புகார்கள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் படி காவல் துறை கூறியுள்ளது. திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்  நிலையத்தின் சார்பில் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: இன்றைய நாட்களில் எல்லாம் ஆன் லைன்மயமாகி விட்டதால் சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத் திலும் ஏதாவது ஒரு வகையில் இன்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது. இணையம் மற்றும் இணையதளத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். சமீப நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் லோன் ஆப் சம்பந்தமாக அதிக புகார்கள் வந்து கொண்டே உள்ளது. எளிதாக லோன் கிடைக்கிறது என்று, அதில் கூறப்படும் நிபந்தனைகளைப் படித்துப் பார்க்காமலே ஒப்புதல் அளித்து  மக்கள் கடன் வாங்குகிறார்கள். ஆனால்  குறிப்பிட்ட தவணை தேதி முடியும் முன் னரே பணம் அனுப்பச் சொல்லி தொந் தரவு செய்யக்கூடும். உங்களுடைய புகைப் படங்களை மார்பிங் செய்து உங்களுடைய பதிவில் உள்ள எண்களுக்கு அனுப்பி உங்களை அவமானப்படுத்தக்கூடும் ஆகவே பொது மக்கள் விழிப்புடன் இருக்கு மாறு சைபர் கிரைம் காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

பள்ளிபாளையம், பிப்.19- ராசிபுரத்திலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள பாவை தனியார் கல்லூரியில், மாவட்ட நிர்வா கம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி இணைந்து நடத்திய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் சனியன்று நடைபெற்றது. இம்முகாமில் தருமபுரி, வேலூர், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள், இளைஞர்கள் நேர்கா ணலில் கலந்து கொண்டனர். 206 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான மேலாளர், தட்டச்சு, விற்பனையாளர்கள், கேசியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நேர்காணல் செய்து தேர்வு செய்த னர். முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட  நபர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் பணி  ஆணைகளை வழங்கினார். மேலும், முகாமில் தேர்ச்சி பெற்ற 3 மாற்றுத்திறனாளி களுக்கு புதிய ஊன்றுகோல்களை வழங்கி ஊக்குவித்தார். இந் நிகழ்வில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி.நட ராஜன் மற்றும் தாளாளர்கள், முதல்வர்கள் கலந்து கொண்ட னர்.

செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பங்கேற்ற கோத்தகிரியைச் சேர்ந்த 31 அரசுப்பள்ளி மாணவர்கள்

உதகை, பிப்.19- கோத்தகிரி பகுதிகளில் உள்ள அர சுப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாண விகள் 31 பேர் டாக்டர் அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் கலந்து கொண்டனர். மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர்  ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அறக்கட் டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் துவற்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகை யில் மாணவர்களின் பங்களிப்பில் தயா ரிக்கப்பட்ட 150 சிறிய செயற்கைக் கோள்கள், சவுண்டிங் ராக்கெட் மூலம் ஞாயிறன்று ஏவப்பட்டது. இதற்கு டாக் டர் அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவுதல் திட்டம் - 2023 என பெயரிடப் பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 6  முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 5  ஆயிரம் மாணவர்கள் மூலம் 150 சிறிய ரக செயற்கைக்கோள்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள் கள் சவுண்டிங் ராக்கெட் மூலம் ஞாயி றன்று மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிப்புலம் என்ற  இடத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட் டது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 3 ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள், 2 ஆயிரம் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற னர். இந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் சவுண்டிங் ராக்கெட் டையும், ஸ்பேஸ் ஜோன் அமைப்பே தயாரித்துள்ளது. சுமார் ரூ.2.5 கோடி  மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டு உள்ளது. இந்நிகழ்வில், பங்கேற்ப தற்காக நீலகிரி மாவட்டம், கெங்கரை, கீழ் கோத்தகிரி அரசுமேல்நிலைப் பள்ளி, சோலூர்மட்டம் உயர்நிலைப் பள்ளி, கரிக்கையூர் மற்றும் அரவேனு அரசு பழங்குடியினர் உண்டு உறை விடப் பள்ளிகளைச் சேர்ந்த 35 மாணவ,  மாணவிகள் மாகபலிபுரம் புறப்பட்டு  சென்றனர். இதையடுத்து அவர்களுக்கு  செயற்கைக்கோள் குறித்து “ஹேண்ட்ஸ்  ஆன் ட்ரைனிங்” எனப்படும் ஒரு நாள்  பயிற்சி அளிக்கப்பட்டது.

உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: கடைகளுக்கு அபராதம்

தருமபுரி, பிப்.19- தருமபுரியில் உள்ள உணவகங் கள் மற்றும் கடைகளில் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்து, கடைகளுக்கு அபராதம் விதித்த னர். தருமபுரி மாவட்ட உணவு பாது காப்புத்துறை கண்காணிப்புக்குழு கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள அலுவலர்களுக்கு ஆட்சி யர் கி.சாந்தி உத்தரவிட்டார். அதன் பேரில் தருமபுரி நகராட்சி, ஆட்சியர் அலுவலகம், இலக்கியம்பட்டி, செந் தில் நகர், நேதாஜி பைபாஸ் உள் ளிட்ட பகுதிகளில் உள்ள சைவ, அசைவ உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமை யில் அலுவலர்கள் நந்தகோபால், குமணன், கந்தசாமி உள்ளிட்ட குழு வினர் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது ஒரு சில உணவகங் களில் குளிர்பதன பெட்டிகளிலிருந்து பழைய இருப்பு வைத்திருந்த கெட் டுப்போன கோழி மற்றும் ஆட்டு  இறைச்சி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தருமபுரி பேருந்து நிலைய பகுதி களில் உள்ள 2 உணவகங்கங்க ளுக்கு விதிமுறைகளை பின்பற்றா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் எச்சரிக்கை  விடுத்தனர். மேலும், உணவகங் களில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி  எறியப்படும் பிளாஸ்டிக் பைகளில் சாம்பார், சட்னி உள்ளிட்ட சூடான உணவுப் பொருட்கள் பார்சல் செய் வதை தவிர்க்க வேண்டும். தவறி னால் அபராதம் விதித்து மேல் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என எச்ச ரிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியி லுள்ள பெட்டிக்கடைகள், குளிர்பான கடைகள், தேநீர் கடைகள் மற்றும் பழக்கடைகள் மற்றும் சிற்றுண்டி உணவுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில கடை கள் உரிய உரிமம் பெறாமலும் காலா வதியான உணவு பாதுகாப்பு சான்றி தழ் வைத்திருந்து வணிகம் செய் வதை கண்டு எச்சரித்து உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு விண்ணப்பித்து சான்று பெற்று நுகர்வோர் காணும் வகையில் வைத்து வணிகம் செய்ய கேட்டுக் கொள்ளப் பட்டது. ஒரு சில பீடா கடைகள், பேக்கரி கள் மற்றும் தேநீர் கடைகளில் தின் பண்டங்கள், அச்சிட்ட காகிதங்களில் பொட்டலமிட்டு கொடுத்த பலகாரங் களை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களை பார்சல் செய்து கொடுத் ததாக உணவகங்கள், பேக்கரி மற் றும் பெட்டிக்கடைகளுக்கு ரூ.12 ஆயி ரம் அபராதம் விதித்தனர்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, பிப்.19- தருமபுரி பட்டு ஏல அங் காடிக்கு பல்வேறு மாவட்டங் களிலிருந்து விவசாயிகள் பட் டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த  அங்காடிக்கு வெள்ளியன்று 2 ஆயிரத்து 149 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து, சனியன்று 3 ஆயி ரத்து 190 கிலோவாக அதிக ரித்தது. இதையடுத்து நடை பெற்ற ஏலத்தில் அதிகபட்ச மாக ரூ.740க்கும், குறைந்த பட்சமாக ரூ.527க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.22  லட்சத்து 10 ஆயிரத்து 428 ஏலம் போனது.

மயானத்திற்கு செல்லும் சாலையில் பூக்களை வீச தடை

நாமக்கல், பிப்.19- குமாரபாளையம் மயானத்திற்கு செல்லும் சாலையில் பூக் களை வீசக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மயானத்திற்கு செல் லும் சாலையில் தினமும் இறந்தவர்களின் உடல்களை எடுத் துச் செல்லும் 5க்கும் மேற்பட்ட அமரர் வாகனங்களில் இருந்து பூக்களை தூவுகின்றனர். மேலும், பட்டாசு வெடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் முக்கிய வீதிகள் மற்றும் மயானத்துக்கு செல்லும் வீதிகளில் அசுத்தம் ஏற்படு கிறது. பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபட்டு வருகிறது. இதனால் அங்கு குடியிருப்பவர்கள் குப்பை கூளங்களாலும், மாசுபட்ட காற்றை சுவாசிப்பதனாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் குமார பாளையம் நகர்மன்ற தலைவர் விஜய்கண்ணன், ஆணையர் (பொ) ராஜேந்திரன் ஆகியோர் மின் மயானத்திற்கு நேரில் சென்றனர். அப்போது மின் மயான ஊழியர்களிடம், மின் மயானத் துக்கு உடல்களை ஏற்றி வரும் அமரர் வாகனங்களில் மயான வீட்டிலிருந்து மாலைகளை ஏற்றக்கூடாது. சாலைகளில் பூக் களை வீசக்கூடாது. எச்சரிக்கையை மீறி பூக்களை வீசும் துக்க வீட்டினருக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் எனவும், அமரர் வாகனங்களில் மாலைகளை ஏற்றினால் அமரர் ஊர்தி ஓட்டு நர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் எனவும் எச்சரித்தனர். மேலும், மயானத்திற்கு எரியூட்ட பதிவு செய்ய வருவோரி டம் சாலைகளில் பூக்களை வீச மாட்டோம், பட்டாசு வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி படிவம் பெற்றுக் கொண்டு உடல் களை எரியூட்டுவதற்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவு றுத்தினார்.