districts

img

முத்தூரில் குப்பை கிடங்கால் மாசுபடும் நிலத்தடி நீர்

திருப்பூர், ஜூலை 31- முத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் அமைந்துள்ள குப்பை கிடங்கால். நிலத் தடி நீர் மாசடைந்து ஆழ்துளை கிணற்று நீர்  மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறி யுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதா வது, முத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈரோடு  செல்லும் சாலையின் அருகில் பேரூராட்சி  குப்பை கிடங்கு அமைத்துள்ளது. சுற்று வட்டார பகுதியில் இருந்து சேகரிக்கப் படும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர் கள் இங்கு கொட்டி வருகின்றனர். இதனால்  இப்பகுதில் உள்ள 300 அடிக்குள் உள்ள  ஆழ்குழாய் நீர் கடுமையாக மாசு அடைந்துள் ளது. ஏற்கனவே நல்ல தண்ணீர் 20 நாட்க ளுக்கு ஒரு முறை தான் வருகிறது. சப்பை  தண்ணீரும் 4 நாட்களுக்கு ஒரு முறை தான்  வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீரும்  இப்படி மக்கள் பயன்படுத்த முடியாத வாகை யில் மாசு அடைந்துள்ளது. தன்னீர் இல்லாமல் நாங்கள் என்ன செய்ய முடியும். மேலும்  இங்குள்ள குப்பைகளுக்கு அவ்வபோது தீ  வைக்கப்படுகிறது. கடந்த முறை தீ வைத்தப் போது தீயை அணைக்க முடியாமல் 3 தீய ணைப்பு வாகனங்கள் கொண்டுவரப் பட்டு வெகு நேரம் போராடி தீ அணைக்கப் பட்டது. அதிலிருந்து வெளியேறும் புகையி னால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே குப்பை  கிடங்கை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண் டும் அல்லது நிலத்தடி நீர் மாசடையாமல்  இருக்க வெள்ளகோவில் பகுதியில் உள்ள  குப்பை கிடங்கிற்கு தலம் அமைத்துள்ளது போல், இங்கும் அமைக்க வேண்டும் என்று  கூறினர்.