districts

img

கே.எஸ்.ஆர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல், டிச.15- திருச்செங்கோட்டிலுள்ள கே.எஸ்.ரங்கசாமி தொழில் நுட்பக் கல்லூரியில் 26 ஆவது பட்டமளிப்பு விழா சனியன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செயல் பட்டு வரும் கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி யில் 2019 - 23 மாணவர்களுக்கான 26 ஆவது பட்ட மளிப்பு விழா சனியன்று கே.எஸ்.ஆர். அரங்கத்தில் நடை பெற்றது. ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சக இணைச்  செயலர் ராஜீவ் சக்சேனா, தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆர்.விஜய் ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாக கலந்து கொண்டனர். கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.ஸ்ரீனிவாசன் பட்ட மளிப்பு விழாவைத் துவக்கி வைத்தார். கல்லூரி முதல் வர் ஆர்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். 2 பிஎச்டி பட்டதாரிகள் மற்றும் 31 தரவரிசை பெற்றவர்கள் உட்பட  684 பட்டதாரிகளுக்கு பட்டங்களை பெற்றனர்.