உடுமலை, ஜன.24 - திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாச னத்திற்கு தண்ணீர் திறக்கும் வகையில் காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படு கிறது. இதனால் அணையில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால், பிஏபி., திட்ட தொகுப்பு அணைகள் முழுக் கொள்ளளவுடன் நிரம்பின. இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, ஐந்து சுற்றுகள் தண்ணீர் வழங்கப்பட்டு, கடந்த 6ஆம் தேதியுடன் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 29ஆம் தேதி, முதல் மூன்றாம் மண் டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் வகையில், சர்க்கார்பதி யிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வருகி றது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணையில், நீர்மட்டம், மொத்தமுள்ள 60 அடியில் 44.27 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 703 கன அடியாக உள்ளது.