தருமபுரி, செப்.26- புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட் டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்க ளின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் தேசம் முழுவதும் பறிக்கப்பட்டு வருகிறது. நாடு முழு வதும் அனைத்து துறைகளிலும் எண் ணற்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. எல்ஐசி, வங்கி, ராணுவம், பாதுகாப்பு தளவாடம், இயற்கை வளம் உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறைகளை தனி யார் மயம் ஆக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டித்து, ஹைதராபாத் தில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தேசிய செயற் குழு விவாதித்து, இதன்தொடர்ச்சி யாக வியாழனன்று அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், புதிய பென்சன் பாது காப்பு ஆணைய சட்டத்தை ரத்து செய்து, இத்திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மாநில அரசுகளுக்கு திருப்பித்தருமாறு நிதி மேலாளர்களுக்கு உத்தரவிட வேண் டும். தினக்கூலி, மதிப்பூதியம், தொகுப்பூதியம் உள்ளிட்ட நியமன முறையை ரத்து செய்து, காலமுறை ஊதியத்தில் ஊழியர்களை வரன் முறைபடுத்த வேண்டும். 5 ஆண்டு களுக்கு ஒருமுறை காலமுறை ஊதிய மாற்றக் குழுவை அமைக்க வேண்டும். தேசியகல்விக் ்கொள் கையை கைவிட வேண்டும். வரு மான வரி உச்சவரம்பை ரூ.10 லட்ச மாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநா தன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, பொருளாளர் மு.அன்பழ கன், துணைத்தலைவர்கள் குணசே கரன், தேவகி, வட்ட நிர்வாகிகள் பன்னீர், மணிவண்ணன், மாரியப் பன், மூர்த்தி, திம்மராயன், மாணிக் கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் முகமது இலி யாஸ், சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பெ.மகேஸ்வரி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெரு மாள், தணிக்கையாளர் கே.புக ழேந்தி உட்பட பலர் கலந்து கொண்ட னர். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் தலைமை வகித் தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் செல்வம், மாவட்ட நிர்வாகிகள் ராணி, அமராவதி, சிங்கராயன். திரு நாவுக்கரசு, கிரிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராக்கிமுத்து தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன், பொருளாளர் ஆர்.சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநா தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார் துவக்க உரையாற் றினார். இதில் கிராம சுகாதார செவி லியர் சங்க மாநிலச் செயலாளர் பிர கலதா, கால்நடை பராமரிப்பு உதவி யாளர் சங்க மாநில பொதுச்செய லாளர் வே.ஜெயபால், மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலை வர் எஸ்.எம்.வேலுமணி, வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செய லாளர் கமலநாதன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் கே.பழனி சாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.