districts

img

ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜன.13- அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படும்  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கையைக்  கண்டித்து, உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பாக  அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பாக வெள் ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகர செய லாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில், குடியரசுத் தலைவர் ஆளுநரைத் திரும்ப  பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பஞ்சலிங்கம், கனகராஜ், சசிகலா, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலூக்க செயலாளர் செளந்தர்ராஜன், காங் கிரஸ் கட்சியின் நகர தலைவர் ரவி, விடுதலை சிறுத்தைகளை  கட்சியின் மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார், மதிமுக நகர  செயலாளர் ராமதாஸ், தமுமுக கமாலூதீன், தந்தை பெரி யார் திராவிடர் கழகத்தின் சிவசங்கரன், ஆதி தமிழர் பேரவை யின் ஈழவேந்தன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார் கள்.