districts

img

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் வட்டாட்சியர் அலுவலகம்!

உடுமலை, டிச.14- உடுமலை வட்டாட்சியர் அலுவலக வாளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் போன்ற  அடிப்படை வசதிகள் முறையாக இல்லாத தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். உடுமலை வட்டாட்சியர் அலுவலக வாளாகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவல கம், குற்றவியல் நீதி மன்றம், குடிமைப் பொருள் அலுவலகம், கிளை சிறைச் சாலை,  சார்பதிவாளர் அலுவலகம், இ சேவை மையம் போன்ற அலுவலகங்களுக்கு நாள் தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து  செல்கின்றனர். இருப்பினும், இங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாத தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர்.  குறிப்பாக, குடிநீர் தொட் டியில் தண்ணீர் இன்றியும், பொது கழிப்பிட  கட்டிடம் புதர் மண்டி விச பூச்சிகள் தங்கும் இடமாகவும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியே திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ளது. மேலும்  இரண்டு சக்கர வாகனங்கள் வளாகம் முழுவதும் ஆங் காங்கே நிறுத்தப்படுவதால் மக்கள் நடத்து  செல்லக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகை யில், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தி லேயே அடிப்படை வசதிகள் முறையாக இல்லாத நிலையில், பொதுமக்களுக்கு  எப்படி அரசு திட்டங்களை செயல்படுத்து வார்கள் என்பது தெரியவில்லை. ஆகவே, உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளா கத்தில் போதிய அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளனர்.