districts

முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள்!

கோவை, ஜூன் 26- அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடு வதாக குற்றம்சாட்டி, ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி கருமத்தம்பட்டி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத் தில் 27 வார்டுகள் கொண்ட கருமத்தம்பட்டி  நகராட்சி உள்ளது. நித்யா மனோகரன் என்பவர் தலைவராக உள்ளார். ஆணை யராக இருந்து வந்த முத்துசாமி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டார். இந்நிலை யில், மதுக்கரை நகராட்சி ஆணையர் பிச்சை மணி கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பு வகுத்து வருகிறார். இந்நி லையில், புதனன்று நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில், நக ராட்சி ஆணையர் பிச்சைமணி உள்ளிட்ட  அதிகாரிகள் தொடர் முறைகேடுகளில் ஈடுப டுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை பணி யிடை நீக்கம் செய்ய வேண்டுமென தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ் செய்தியாளர் களிடம் பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கருமத்தம்பட்டி நகராட்சியில் நிர்வாக சீர்கே டுகள் அதிகரித்துள்ளது. பணிகள் எதுவும் முறையாக நடைபெறாததால் மக்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வருவாய் பணிகளுக்காக நகராட்சியை நாடும் பொதுமக்கள் தினமும் அலைக் கழிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், நகர் மன்ற கூட்டத்தில் நிர்வாக சீர்கேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதிகாரிகளின் மெத்தனப் போக் கான நடவடிக்கையால் தான் கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் திமுகவுக்கு கருமத்தம் பட்டி நகராட்சி பகுதிகளில் வாக்கு வங்கி  குறைந்துள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும்  அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய  வேண்டுமெனவும் தீர்மானத்தில் வலியுறுத்தி யுள்ளோம், என்றார். இதுகுறித்து பிச்சைமணியிடம் கேட்ட போது, நகர்மன்றக் கூட்டத்தைக் கூட்டுவ தற்கு தலைவருக்கு மட்டுமே அதிகாரம்  உள்ளது. சட்டவிதிகளின்படி நகர்மன்றக் கூட்டத்தை கூட்ட துணைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை. இந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லத் தக்கது அல்ல, என்றார்.