districts

தனியார் முதலாளிகளுக்காக மட்டும் தான் அரசு

கோவை, ஜன.22- லாப நோக்கத்தோடு செயல்படுகின்ற தனியார் முதலாளிகளுக்காக மட்டும் தான்  அரசு செயல்பட்டு வருகிறது என கோவை யில் நடைபெற்ற பிஎஸ்என்எல் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் பேசினார். காம்ரேட் டாக்கீஸ் சமூக வலைதளக்குழு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மகத்துவத்தை  முன்வைத்து உருவாக்கிய ஆவணப்படம் வெளியீட்டு விழா கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில், ஆவணப்படத்தை வெளி யிட்டு திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் பேசுகையில், தனியார் நிறுவனங்களின் மூவ ருக்கு மட்டும் தொலைதொடர்பு நிறுவனங்க ளின் சேவை உரிமையை அரசு வழங்கு கின்றது. எதார்தமாக தற்போது அரசின் உரி மையாளர்களாக அவர்கள் தானே இருக் கின்றனர் என்பதை நாம் உணர வேண்டும். லாப நோக்கத்தோடு செயல்படுகின்ற தனி யார் முதலாளிகளுக்காக தான் அரசு செயல் பட்டு வருகிறது. தொலை தொடர்பு நிறு வனத்தைத் தொடர்ந்து, ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்க பார்க்கிறார்கள். பொதுத்துறைகளை உரு வாக்குவதற்கு உழைத்தவர்கள் சாதாரண தொழிலாளர்கள். அதனை விற்க பார்க்கி றார். அதனை பெரும் லாப நோக்கத்தோடு மட்டுமே தனியார் நிறுவனங்கள் செயல் படுகிறது என்பதை மக்கள் உணராமல் உள்ளனர். அந்த வகை மக்களுக்கு உணர்த்து கிற பனியினை திரைத்துறையிலிருந்து, சமூக ஊடகங்களிலிருந்து நாங்கள் செய்கிறோம். களத்திலிருந்து உழைப்பாளி மக்களை, வர்க்க அணிகளிடத்தில் செய்ய வேண்டிய பணிகளை பிஎஸ்என்எல் ஊழியர்களாகிய நீங்கள் செய்ய வேண்டும், என்றார்.

இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், பிஎஸ் என்எல் நிறுவனம் சேவை நோக்கத்தோடு துவக்கப்பட்டது. சேவை நோக்கத்தோடு அரசு முதலீட்டில் கட்டிடங்கள், அலைக் கற்றை உயர்கோபுரங்கள் கட்டப்பட்டன; ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அது எல்லா  காலங்களிலும் மழை, வெள்ளம், பேரிடர் காலங்களில் சேவை நோக்கத்தோடு செயல் பட்டது. ஆனால், தற்போது சேவை நோக்க மற்ற ஒன்றிய பாஜக அரசு லாபம் மட்டுமே நோக்கமாக கொண்ட தனியாரிடத்தில் அத் தனை பொதுத்துறை நிறுவணங்களையும் விற்க துடிக்கிறது. தற்போது உள்ள மோடி அரசு வெட்கமே இல்லாமல் தனியார் மட் டுமே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரு கிறது. இன்னும் புரிகிற வகையில் சொல்ல  வேண்டுமானால், இவர்கள் (பாஜக) சட்ட மன்ற அலுவலகத்திலேய லாபம் என எழுதி  துவங்கியவர்கள் தானே என பாஜக கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பி னர் வானதி சீனிவாசன், தன்னுடைய சட்ட மன்ற அலுவலகத்தில் லாபம் என எழுதியி ருந்ததை நினைவுபடுத்தினார். மற்றொரு புறம் பாஜக 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வசூலித்து வைத்துள்ளது. இதை வழங்கியவர்கள் லாபம் பெறாமலா? இவ்வளவு பெரிய  தொகையை அந்த கட்சிக்கு வழங்கியிருப் பார்களா? குறிப்பாக, இவர்களிடத்தில் பொதுத் துறை நிறுவனங்களை வாங்கும் அம்பானி,  அதானி போன்றவர்கள் எந்தவித உள்கட்ட மைப்பு வசதிகளும் இல்லாமல், பொதுத் துறை நிறுவனங்களின் கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொள்ளவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது அடுத்த தலைமுறையினர் பென்சன் என்கிற வார்த் தையை கூட பயன்படுத்த முடியாது என்கிற  நிலைக்கு அரசு ஊழியர்கள் வஞ்சிக்கப்பட்டு,  ஒன்றிய அரசு அதனை பேசாமல் இருக்க வைத்துள்ளது, என்றார்.