இளம்பிள்ளை, பிப்.5- எடப்பாடி அரசு மருத்து வமனை மருத்துவர்கள் பெண் ஒருவருக்கு கேன்சர் கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர். சேலம் மாவட்டம், தார மங்கலத்தைச் சேர்ந்த கூலி தொழில் செய்து வரும் அய் யம்மாள் என்ற பெண் கடந்த ஆறு மாத காலமாக தனது கையில் ஏற்பட்ட கேன்சர் கட்டியால் பெரும் அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இதனி டையே எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பு அறுவை சிகிச்சை நிபு ணர் மருத்துவர் இமாம் என்பவரிடம் ஆலோ சனை கேட்டுள்ளார். அதன்பின்னர் தலைமை மருத்துவர் செந்தில்குமாரிடம் ஆலோசனை பெற்று, மருத்துவர் இமாம் தலைமையிலான மருத்துவ குழுவி னர் கேன்சர் கட்டியால் அவதிப்பட்டு வந்த அய்யம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்த னர். மேலும், மணிக்கட்டின் செயல்பாடு தடைபடாமல் இருக்க எலும்பு ஒட்டும் சிகிச்சையும் வெற்றிகரமாக செய்து சாதனை புரிந்துள்ளனர். தனியார் மருந்துவமனைக்கு இணை யாக அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ள அரசு மருத்துவ குழுவை பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழக அரசின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந் துள்ளதாக மருத்துவர் இமாம் தெரிவித் தார்.