சேலம், அக்.2- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவைக்கான இலட் சினை மாநிலத் தலைவர் மு.அன்பரசு சேலத் தில் வெளியிட்டார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை டிச.17 ஆம் தேதியன்று சேலம் மாநகரில் நடைபெறவுள் ளது. இன்றைய காலக்கட்டத்தில் அரசு ஊழி யர்களின் கோரிக்கைகளுக்கான முக்கிய முடிவுகள் இப்பேரவையில் எடுக்கப்பட உள் ளது. இந்நிலையில், இப்பேரவைக்கான வர வேற்புக்குழு கூட்டம், வரவேற்புக்குழு தலை வர் ஜி.சுகுமார் தலைமையில் நடைபெற் றது. நிர்வாக தலைவர் ந.திருவேரங்கன் வர வேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் பேர வைக்கான இலட்சினை மாநிலத் தலைவர் மு.அன்பரசு வெளியிட்டார். சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பி.ஜே.கண் ணன், சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.சுப்ரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில், வரவேற்புகுழு செயலாளர் பு. சுரேஷ், நிதிக்குழு உறுப்பினர் சண்முகம், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் வே.செல்வம் ஆகியோர் கலந்து கொண்ட னர்.