உடுமலை, நவ.24- ஊதிய வேறுபாடுகளை களைந்து, சம வேலைக்கு சம ஊதி யம் வழங்க வேண்டும், என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட மாநாடு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் உடுமலையிலுள்ள சங்க அலுவல கத்தில் நடைபெற்றது. மகளிர் துணைக்குழு மாநாடு, மாவட்டத் தலைவர் ராணி தலைமையில் நடை பெற்றது. இம்மாநாட்டில், திருப்பூர் மாவட்ட அளவில் பெண் அரசு ஊழி யர்கள் பணித்தளங்களில் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகியிருப்ப தும், வெளியே சொல்ல முடியாத வகையில் பாதிப்பிற்குள்ளாகும் பெண் ஊழியர்களை பாதுகாக்கும் வகையில், மாவட்ட அளவில் விசாகா கமிட்டி அமைக்க வேண் டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக, உதவி வேளாண்மை அலுவலர்கள் உள் ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டை கலைந்து, வேறுபாடுகள் இல்லாமல் ஊதியம் வழங்க வேண்டும். இந்திய அளவில் 98 ஆவது தர மேம்பாட்டில் இருக்கும் உடுமலை, அவிநாசி, பல்லடம் மற் றும் தாராபுரம் அரசுக்கல்லூரியில் விண்ணப்பிக்கும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியர்களுக்கும் இடம் கிடைத்திடும் வகையில் கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண் டும். உடுமலை அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும். நிறுத்தி வைக்கபட்ட சரண் விடுப்பு, ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகைகளை உடனடி யாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில், சங்கத் தின் திருப்பூர் மாவட்டத் தலைவராக ராணி, செயலாளராக பாலசுப்பிர மணியன், பொருளாளராக முருக சாமி, துணைத்தலைவர்களாக மதன் குமார், அந்தோணி ஜெயராஜ், பாண் டியம்மாள், புஷ்பவள்ளி இணைச் செயலாளர்களாக ராமன், மேகலிங் கம், ராணி, வைரமுத்து மற்றும் தணிக்கையாளர்களாக பசுபதி, மார்க்கண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பேரணி, பொதுக்கூட்டம் முடிவில், சனியன்று மாலை உடு மலை மத்திய பேருந்து நிலையத்தில் அரசு ஊழியர்களின் பேரணி நடை பெற்றது. இப்பேரணியை அரசு ஊழி யர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் செல்லத்துரை துவக்கி வைத்தார். இதன்பின் நகராட்சி அலு வலகம் முன்பு கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் ராணி தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், இணைச்செயலாளர் மேகலிங்கம் வரவேற்றார். தீர்மா னங்களை விளக்கி மாவட்டச் செய லாளர் பாலசுப்பிரமணியன் பேசி னார். மாநிலச் செயலாளர் அம்ச ராஜ், மாநில துணைத்தலைவர் பர மேஸ்வரி சிறப்புரையாற்றினார். முடி வில், மாவட்டப் பொருளாளர் முருக சாமி நன்றி கூறினார்.