தேசிய ஒருமைப்பாட்டு முகாமிற்கு அரசு கல்லூரி மாணவர் தேர்வு திருப்பூர், ஜூன் 18 - தேசிய ஒருமைப்பாடு முகா மிற்கு திருப்பூர் மாவட்டத்திலி ருந்து சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவன் தேர்வாகியுள்ளார். ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் சார்பில் ஜூன் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரெசென்ட் பொறியியல் கல்லூரி யில் தேசிய ஒருமைப்பாடு முகாம் நடைபெறுகிறது. அதற்காக நாடெங்கிலிருந்தும் 210 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இம்முகாமில் பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து 6 பேர் தேர்வு செய்யப் பட்டனர். அதில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு -2 மாணவர் ராஜபிரபு (இரண்டாமாண்டு வரலாறு) தேர்வாகி யுள்ளார். இவர் அலகு -2 யின் மாணவ செயலர்களில் ஒரு வராக உள்ளார். மேலும் கடந்த ஒரு வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலைமுடி தானம் செய்ய முடி வளர்த்தி வந்தார். ஆறு மாணவர்களில் இவர் ஒருவர் மட்டுமே அரசு கல்லூரியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இம் முகாமில் புதுச்சேரி, ஒடிசா, குஜராத், கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு மாநில கலச்சாரத்தை விளக்கும் விதமாக நிகழ்வுகள் அமை யும். ஞாயிறன்று கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள், நாட்டு நலப் பணித்திட்ட மாணவ மாணவிகள் வழியனுப்பி வைத்த னர்.