districts

img

பாஸ்டேக்கில் பணமில்லை சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து

இளம்பிள்ளை, ஜன.5- பாஸ்டேக்கில் பணமில்லாததால், வைகுந்தம் சுங்கச்சாவடியில் அரசு  பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணி கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். சேலத்திலிருந்து சங்ககிரி வழியாக பவானி நோக்கி அரசு பேருந்து செவ் வாயன்று காலை சென்று கொண்டி ருந்தது. சங்ககிரியை அடுத்த வைகுந் தம் சுங்கச்சாவடியை அரசு பேருந்து கடக்க முயன்றது. அப்போது, பாஸ் டேக்கில் போதிய பணம் இல்லாத தால், சுங்கம் வசூலிக்கும் ஊழியர்கள் பேருந்தினை முன்னே செல்ல அனு மதிக்காமல் நிறுத்தி வைத்தனர். அத னையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கச்சாவடி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், பேருந்து சுங்கச்சாவடியில் 30 நிமிடம்  நின்றதால், அப்பேருந்தில் பயணம் செய்த அரசு, தனியார் நிறுவன ஊழி யர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு  செல்ல முடியாமல் தவிப்பிற்குள்ளா கினர். இதனால் அவ்வழியாக வந்த மற்ற பேருந்துகளில் ஏறிச் சென்றனர். இதன்பின் தாமதமாக அரசு பேருந்து புறப்பட்டுச் சென்றது.