சேலம், நவ.13- சேலம் மாவட்டம் ஓமலூரை பகுதி யில் கடந்த ஒரு மாதமாக் குடிநீர் விநி யோகிக்கப்படாததால் அப்பகுதி மக் கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிக ளுக்கு தகவல் அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என கூறப் படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து திங்களன்று காலை ஓமலூரில் இருந்து மாட்டுக்காரன்புதூர் செல்லும் சாலையில் தும்பிப்பாடி ஊராட்சி ஒட்ட தெரு பகுதியில் அரசு பேருந்தை சிறை பிடித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர், தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உப்பு தண்ணீரை குடிப்பதால் குழந்தை கள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், எனவே சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப் பான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். உடனடி யாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்ற னர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது.