திருப்பூர், நவ. 14 - திருப்பூர் அருகே வேலம்பட்டி பகு தியில் நீர்நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி கட்டிடம், மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி புதன் கிழமை இடித்து அகற்றப்பட்டது. அவிநாசி முதல் அவிநாசிபாளை யம் வரை 31 கிலோமீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை எண் 381 ஏ என்று அரசு பெயரிட்டுள்ளது. திருப்பூர் மாநக ராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி ஆகிய நகர்ப்பகுதிகளின் நெடுகிலும் கடந்து செல்லும் இந்த சாலையில் பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டி பகு தியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள் ளது. 31 கிலோமீட்டர் நீள சாலையில், திருப்பூரின் மிக முக்கியமான குமரன் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ள காமராஜர் சாலை, தாராபுரம் சாலை என போக்குவரத்து நெருக்கடி மிகுந்த குறுகலான சாலை பகுதிகள் உள்ளன. அத்துடன் 20க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து சிக்னல்க ளும், சாலையைக் கடக்கும் வசதிகளும் உள்ளன. தடையில்லாத விரைவான போக்குவரத்துக்காக அமைக்கப்படும் நான்கு வழிச் சாலை என்று சொல்லி விட்டு, அதற்கு இணையாக அமைக்க வேண்டிய சேவைச் சாலையையும் அமைக்காமல், விதிமுறைகளையும் பின்பற்றாமல் சுங்கம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முயற்சித்து வருகிறது. குறிப்பாக வேலம்பட்டி சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ள இடம் நீர் நிலைப் பகுதியாகும். சாலையின் கிழக்கு, மேற்கு என இரண்டு பக்கங்க ளும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. சுங்கச்சாவடிக்கு உரிய அலு வலக கட்டிடமும் அங்கு கட்டப்பட்டி ருந்தது. இத்துடன் திருப்பூர் நகருக்கு மிக அருகில், ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் வேலைக்கு வந்து செல்லும் நிலையில், வேலம்பட்டி சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப் பது மக்களிடம் பணம் பறிக்கும் செயல் என்று பலதரப்பினரும் எதிர்ப்புத் தெரி வித்து வருகின்றனர். எனவே வேலம் பட்டி சுங்கச்சாவடியை எதிர்த்து பல் வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வேலம்பட்டி சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிக்கை வெளியிட்டு அதற்கான பணிகளைச் செய்து வந்தது. இந்நிலையில் சுங்கச் சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பினர் போராட்டமும் தீவிரமடைந்தது. சுங்கம் வசூலிக்கக் கூடாது, வேலம்பட்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு சுங்கக் கட்டி டத்தை அகற்ற வேண்டும் என்று வலியு றுத்தினர். இந்நிலையில் சுங்கம் வசூ லிக்க ஆயத்த நடவடிக்கைகள் மேற் கொள்வதை அறிந்து கடந்த செவ்வா யன்று சுங்கச்சாலை எதிர்ப்பு கூட்ட மைப்பினர் சுங்கச்சாவடி முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பின்னணியில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுங் கச்சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பினரு டன் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபி ஷேக் குப்தா உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடி வில், வேலம்பட்டியில் நீர்நிலைப் பகு தியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடிக்க ஆட்சியர் உத்தர விட்டார். அதன்படி அந்த கட்டிடம் இடித் துத் தகர்க்கப்பட்டது. இப்பிரச்சனையில் ஆக்கிரமிப்புக் கட்டிடம் இடிக்கப்பட்டு, விவசாயிக ளின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்ததாகக் கூறிவிட்டு அடுத்தக் கட்ட மாக சுங்கம் வசூலிக்க அரசு நிர்வாகம் தயாராகி வருகிறது. ஆனால் இந்த சாலை முழுவதும் நான்கு வழிச் சாலைக்கான விதிமு றைப்படி இல்லை, ஆக்கிரமிப்பு இடத் தில் ஒரு கட்டிடம் மட்டுமே இடிக்கப்பட் டுள்ளது. இருபுறமும் நீர்நிலை ஆக்கி ரமிப்பை அகற்றி நீர் வழியை உத்தர வாதப்படுத்த வேண்டும், சுங்கம் வசூ லிக்கக் கூடாது என்றும் சுங்கச்சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பினர் மற்றும் பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.