புதுதில்லி, மார்ச் 21- கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்படுபவர் களுக்கு சிகிச்சையளிக்க நாடு முழுவதும் அரசு மற்றும் தனி யார் மருத்துவமனைகளில் 60 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தாக்குதலில் இந்தியா தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. மூன்றாவது நிலையான சமூக பரவல் நிலைக்கு செல்லாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கை களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தேவையான அளவுக்கு வென்டிலேட்டர் கள், ஆக்ஸிஜன், முக கவசங்களை தயாராக வைக்க அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்து வமனைக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கவும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.