கோவை, ஜன.13- கோவையில் காலாவதி யான மற்றும் போலி உரி மைத்தைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 916 அக் மார்க் முத்திரை இடுவதாக கிடைத்த தகவலின்பேரில், தர நிர்ணய அதிகாரிகள் நடத் திய திடீர் சோதனையில் ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பண்டிகை காலத்தினை பயன்படுத்தி போலி நகைகள் விற்ககப்படுவது குறித்து குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வரு கின்றன. பொதுமக்களின் ஆர்வத்தை பயன் படுத்தி தங்கத்தின் அளவை குறைத்து அதே அளவிற்கு செம்புகளை இணைத்து தங்க நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந் நிலையில், இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரி மீனாட்சி தலைமையில் கோவை செட்டி வீதி, பெரிய கடை வீதிகளில் வியா ழனன்று அதிரடி சோதனை மேற்கொண்ட னர். 22 கேரட் தங்க நகைக்கான தர சான்று முத்திரையிடும் தொழில் கூடங்கள் அமைந் திருக்கின்ற இந்த பகுதியில் ரேவதி, ஸ்ரீ என்ற இரண்டு ஹால்மார்க் முத்திரையிடும் தொழில் கூடங்களில் திட்டமிட்டு தர நிர் ணய அமைவன அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பத்து பேர் இரண்டு கடைகளி லும் சோதனை மேற்கொண்டனர். இதில், தங்க நகைகளில் சட்டவிரோதமாக ஹால் மார்க் முத்திரை இட்டுக்கொண்டிருந்தனர். மேலும், லேசர் மெசினிலும் தங்க நகை களுக்கான தரச்சான்று ஹால்மார்க் முத்தி ரைகளை இட்டுக் கொண்டிருந்த சட்ட விரோத கும்பலை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர். மேலும், நகைகளை பறிமுதல் செய்து தர நிர்ணய அமைவன அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகை காலங்களில் பொது மக்களின் ஆர்வத்தினை ஆதாரமாக கொண்டு இந்த போலி நகைகள் விற்கப் படுகிறது. சட்ட விரோதமாக விற்கப்படு கின்ற இந்த நகைகள் தரமற்றது. சட்ட விரோ தமாக செயல்பட்ட கடைகளின் உரிமம் காலா வதியாகி உள்ளது. ஒரு கடை மூடப்பட்டு இருந்த நிலையில், அந்த கடையின் ஊழி யர்கள் கடையின் பெயரை பயன்படுத்தி நகைக்கான தர முத்திரைகளை போலி யாக இட்டிருக்கின்றனர். மேலும், ரூ.11 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடையினுள் ஏராளமான நகைகள் உள்ளது. கடைக்கு சீல் வைத்து, கடையின் உரிமையாளர், ஊழி யர்களிடம் சட்ட விரோத நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கொண்டு வரு வதாக தெரிவித்தனர்.