தங்க முலாம் பூசி மோசடி - இருவர் கைது
கோவை, மே 10- கோவையில் தங்க முலாம் பூசப்பட்ட காப்பரை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை, ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் விசு (22). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவைப்புதூர், எம்.ஜி.ஆர். ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பாலதண்டபாணி (65), இவரது மகன் விவேக் (35) கார் ஓட்டுநர்களாக உள்ளனர். இவர்கள் ஆர்.எஸ்.புரம், டிபி சாலையில் உள்ள வங்கியில் நகை அடமானம் வைத்துள் ளதாகவும், அதனை மீட்க பணம் வேண்டும் என விசுவிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து விசு அவர்களின் நகையை ரூ. 68 ஆயிரம் கொடுத்து மீட்டு, அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் நகைகளை மீண்டும் விசுவிடம் கொடுத்து ரூ.58 ஆயிரம் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து விசு, அவர்கள் கொடுத்த நகையை வங்கியில் அடமானம் வைக்க சென்றுள்ளார். ஆனால், அந்த நகைகள் தங்க முலாம் பூசப்பட்ட காப்பர் என்பது தெரியவந்தது. இதனால் ஏமாற்றமடைந்த விசு, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகையை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பாலதண்டபாணி, அவரது மகன் விவேக்கை ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தின் முன் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானை
உதகை, மே 10- கூடலூர் அருகே புதனன்று திடீரென குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள நாடுகாணி, பொன்வயல் கிராமத்தில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை இரவு நேரங் களில் சுற்றி வருவதை வழக்கமாக கொண்டி ருக்கிறது. தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ள நிலையில், அவற்றை தேடி யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்து உள்ளது. இந்நிலையில், புதனன்று காலை பொன் வயல் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக் குள் திடீரென ஒற்றை யானை நுழைந்தது. குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித்திரிந்த யானையைக் கண்ட கிராம மக்கள் அச்சம டைந்தனர். இதையடுத்து அந்த யானை வனப் பகுதிக்குள் சென்று தஞ்சம் அடைந்தது. இரவு நேரங்களில் மட்டும் ஊருக்குள் வரும் யானை, தற்போது பகல் நேரங்களிலும் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் போராட்டம் வெற்றி
ஈரோடு, மே 10- ஈரோட்டில் நடைபெற்று வந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்க ளின் காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை யின் கோபி கோட்டப் பொறியாளரின் விதிமீறல் நடவடிக்கையைக் கண்டித் தும், முரண்பாடான முதுநிலை பட்டி யல் வெளியிட்டதைக் கண்டித்தும், அதனை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டப் பொறியாளர் அலு வலக வளாகத்தில் போராட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பணியாளர் சங்கத்தினர் கடந்த 6 நாட்களாக நடத்திய போராட்டத் தையடுத்து கோபி வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோருடன் முத் தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற் றது. இதில், எந்த உடன்பாடும் ஏற்படாதநிலையில், போராட்டத் தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இருப்பினும், கோரிக்கை களுக்குத் தீர்வு காணப்படாமல் போராட்டத்தை கைவிடப் போவ தில்லை என்கிற உறுதியோடு போராட்டம் நடைபெற்றது. இதனை யடுத்து, செவ்வாயன்று இரவு, கோவை கண்காணிப்பு பொறி யாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சாலைப்பணி யாளர்களின் முதுநிலைப்பட்டியல் தொடர்பாக உரிய அரசு விதிகளின் படி வரும் ஜுன் 5ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். நம்பியூர் உட்கோட்டத்தில் மாநகர ஈட்டுப்படி வழங்கப்படும். மழைக்கோட்டு உள் ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தளவாடங்கள் உரிய நிதி பெறப்பட்ட உடன் வழங்கப்படும். 20 வருடம் பணி முடித்த சாலைப்பணியாளர் களுக்கு சிறப்பு நிலை ஊதியம் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமான உத்தர வாதம் அளிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் கோட்ட பொறியாளர், வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச் செய லாளர் அம்சராஜ், மாநிலச் செய லாளர் சு.செந்தில்நாதன், கோட்ட தலைவர் என்.முருகவேல், செய லாளர் ஆர்.கருப்புச்சாமி, அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மூ.சீனிவாசன், மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். இதனையடுத்து 6 நாள் போராட்டம் முடிவிற்கு வந்தது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர் களின் தொடர்ச்சியான உறுதிமிக்க போராட்டத்தால் நிர்வாகம் வேறுவழி யின்றி கோரிக்கைகளை நிறை வேற்ற உறுதியளித்துள்ளது குறிப் பிடத்தக்கது.
1050 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
கோவை, மே 10- சிங்காநல்லூரில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1050 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பொது விநியோக திட்ட ரேசன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை, சிங்காநல்லூர் அருகே பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனையில் ஈடு பட்டனர். அதில் ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீ சார் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுக்கரை, குமிட்டி பதி அர்ஜூனர் காலனியைச் சேர்ந்த வல்லரசு (25) மற்றும் வேலந்தாவளத்தைச் சேர்ந்த நல்லமணி (23) ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் களிடமிருந்து 21 மூட்டை கள் அடங்கிய 1050 கிலோ ரேசன் அரிசி மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப் பட்டது.
ரூ.9 லட்சத்தில் காவலர் அங்காடி: கட்டிக் கொடுத்த சிவில் இன்ஜினியர் சங்கம்
திருப்பூர், மே 10 - திருப்பூர் மாநகராட்சி நல்லூரில், திருப்பூர் மாவட்ட காவல் துறை ஆயுதப்படை வளாகத்தில் ரூ.9 லட்சம் செலவில் காவலர் மெருகு அங்காடியை திருப்பூர் சிவில் இன்ஜி னியர்கள் சங்கத்தினர் கட்டிக் கொடுத்துள்ளனர். இதன் திறப்பு விழா வியாழனன்று (இன்று) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் முன்னாள் தலைவர் பி.கே.முரளி மற்றும் 2022 - 2024 கால கட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இந்த கட்டடத்திற்கு நிதியுதவி செய்து கட்டிக் கொடுத்துள்ளதாக அசோசியேசன் உடனடி முன்னாள் தலைவர் சௌ.ஸ்டாலின் பாரதி தெரிவித்தார்.
மே 13இல் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்
திருப்பூர், மே 10 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் வரும் 13ஆம் தேதி சனியன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர் முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார். அவிநாசி வட்டம் தொரவலூர், தாராபுரம் வட்டம் குண்டடம், காங்கேயம் வட்டம் நெழலி, மடத்துக்குளம் வட்டம் நீலம்பூர், பல்லடம் வட்டம் வே.கள்ளிப்பாளையம், திருப்பூர் வடக்கு வட்டம் வேலம்பாளையம், திருப்பூர் தெற்கு வட்டம் முதலிபாளையம், உடுமலைபேட்டை வட்டம் தின்னப் பட்டி, ஊத்துக்குளி வட்டம் விருமாண்டம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும். குடிமைப்பொருள் தனி வட்டாட் சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு காண்பார்கள். குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி பதிவு, மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் பெறுதல் ஆகிய வற்றிற்கு மக்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று மாவட்ட நிர்வாக செய்திக்குறிப்பில் ஆட்சியர் எஸ்.வினீத் கூறியுள்ளார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:27.49/60அடி
நீர்வரத்து:5கன அடி
வெளியேற்றம்:42கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்:61.26/90அடி.
நீர்வரத்து:183கனஅடி
வெளியேற்றம்:13கன அடி
உடுமலையில் எஸ்.ஐ., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
திருப்பூர், மே 10 - திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் எஸ்.ஐ., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.,) தேர்வுக்கு 621 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு ஜூன் 1ஆம் தேதி முதல் www.tnsurb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூன் 30. இத்தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் தன்னார்வ பயிலும் வட்டம் அமைந்துள்ள உடுமலைப்பேட்டையில் நடைபெறுகிறது. அங்குள்ள எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மே 4ஆம் தேதி அன்று தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை இந்த வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி வகுப்பில் மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. எனவே தேர்விற்கு தயாராகும் மாணாக்கர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளும்படி ஆட்சியர் எஸ்.வினீத் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர், மே 10 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல் லூரியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்குரிய இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாண வர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண் ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் (30) ஆங்கில இலக்கியம் (50), பொருளியல் (30), வரலாறு (50), பி.காம் (100), பிகாம் (சி ஏ) (60), பிகாம் சர்வதேச வணிகம் (50), பிபிஏ (50), பிசிஏ (50), பிஎஸ்ஸி கணினி அறிவியல் ஷிப்ட் 1 (60), பி.எஸ்ஸி கணினி அறிவியல் ஷிப்ட் 2 (60), பிஎஸ்ஸி இயற்பியல் (24), வேதியியல் (48), கணிதம் (75), விலங்கியல் (48), ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் (50) ஆகிய இளநிலைப் பட்ட வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப்பாடப்பிரிவுகளுக்கு விண்ணப் பிக்கும் நடைமுறை www.tngasa.in என்ற இணையதளத்தின் வாயிலாக மே 8ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள், வருகிற மே 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை விண் ணப்பிக்கலாம். கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை தகவல் வழிகாட்டு மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல் படும். சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர் களின் தர வரிசைப் பட்டியல் www.cgac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் மே 26 அன்று காலை வெளியிடப்படும். மே 29 அன்று சிறப்புப் பிரிவிற்கான கலந்தாய்வு நடைபெறும். மே 30 முதல் பிற பிரிவினருக் கான முதல் கட்டக் கலந்தாய்வு ஜூன் 3 வரை நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கழிப்பறை குத்தகைதாரரின் மகன் கடத்தல் ரூ.20 லட்சம் பணம் கேட்ட நான்கு பேர் கைது
திருப்பூர், மே 10 - திருப்பூரில் மாநகராட்சி கழிப்பறை குத்தகைதாரரிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டு அவரது மகனைக் கடத்திய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் கட்டண கழிப்பிடங்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், மருதமுத்துவின் மகன் கண்ணன் (26), குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள கழிப்பிடங்களுக்கு சென்று நாள்தோறும் பணம் வசூலித்து வந்தார். செவ்வாயன்று காலை பணம் வசூலிக்க லட்சுமி நகருக்கு சென்றார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை மறித்து, அவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். மேலும், அவரது தாயாரிடம் அலைபேசி மூலம் ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். இது தொடர்பாக மருதமுத்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமத்தில் வைத்து கண்ணனை காவல் துறையினர் மீட்டனர். லட்சுமி நகர் கழிப்பிடத்தில் வேலை செய்யும் ஹனிபா (51) என்பவருக்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது நண்பர்கள் கார்த்திக் (36), சஞ்சீவ் (32) மற்றும் லட்சுமணன் (37) ஆகிய நான்கு பேர் சேர்ந்து கண்ணனை காரில் கடத்தியதாக தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் கடத்தல் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் வடக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
காவலர் போல் நடித்து பணம் வசூல்
சேலம், மே 10- வாழப்பாடி பகுதியில் காவல் துறை அதிகாரி போல் உடை அணிந்து, இருசக்கர வாகனத்தில் வருபவர்களை நிறுத்தி பணம் வசூலித்த நபரை காவல் துறையினர் கைது செய்த னர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பாப்பான் ஏரி பகுதியில் தனிநபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வருப வர்களை நிறுத்தி பணம் வசூலிப்பதாக வாழப்பாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வாழப்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற னர். அப்போது, காவலர் சீருடையில் இருந்த கடம்பூர் பகு தியைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம், சீருடை இல்லா மல் வந்த காவலர் முருகேசன், “சார் நீங்க எந்த காவல் நிலை யத்தில் பணிபுரிகிறார்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு “வாழப்பாடி காவல் நிலையத்தில் தான் பணிபுரிகிறேன்” என்று கடம்பூரைச் சேர்ந்த முருகேசன் கூறியுள்ளார். இதை யடுத்து அவரை போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், முருகேசன் ஆத்தூர் பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும், ஏற்கனவே இவர் மீது வழக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் போக்குவரத்து மாற்றம்
கோவை, மே 10- கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை, சிந்தாமணி சந்திப் பில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு புத னன்று காலை 11 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப் படவுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம் சாலை, சிந்தா மணி சந்திப்பு வழியாக டி.பி.சாலை, வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம் செல்லும் வாகனங்கள், கிழக்கு பெரியசாமி ரோடு வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. மாற்றாக, கிழக்கு பாஷியகாரலு ரோடு வழியாக சென்று, தங்க ளது பயணத்தை மேற்கொள்ளலாம். மேலும், கிழக்கு பெரியசாமி ரோடு வழியாக, சிந்தாமணி சந்திப்பு மேட்டுப் பாளையம் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த போக்கு வரத்து மாற்றத்திற்கு, பொது மக்கள் தங்களது ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வேளாண் பல்கலையில்., மாணவர் சேர்க்கை
கோவை, மே 10- தமிழ்நாடு வேளாண்மை மற்றும் மீன் வளப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக் கான விண்ணப்ப பதிவுகள் இணையதளத் தில் புதனன்று துவங்கப்பட்டது. கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரி கள், 28 இணைப்பு கல்லூரிகளில் 14 பிரிவு களில் இளநிலை பட்டப் படிப்புகள், 3 பிரிவு களில் பட்டயப் படிப்புகள் வழங்கப்படு கின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல் கலைக்கழகத்தில் 6 பாடப் பிரிவுகளில் இள நிலை பட்டப் படிப்புகள், 3 பிரிவுகளின் கீழ் தொழில்நுட்ப பாடப்பிரிவுகளும் வழங்கப் படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் மீன்வளப் பல்கலைக் கழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டு மாண வர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி இணைய தளத்தில் புதனன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கத்தின் கீழ் செயல்படும் 18 உறுப்பு கல்லூரி கள், 28 இணைப்பு கல்லூரிகளில் இளமறிவி யல் பிரிவில் 12 பாடப் பிரிவுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நடப் பாண்டு உயிரித் தகவலியல், வேளாண்மை தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பாடப்பிரிவுகள் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கத்தின் 14 உறுப்புக் கல்லூரிகளில் 3,363 இடங் கள், 28 இணைப்பு கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 2,806 இடங்கள் என மொத்தமாக அரசு ஒதுக்கீட்டின் கீழ் 6,169 இடங்கள் நிரப்பப் படவுள்ளன. 2023 - 24 ஆம் கல்வியாண்டுக் கான விண்ணப்பப்பதிவு இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய விண்ணப்ப கட்ட ணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 9 ஆம் தேதிக்குள் 9.6.23 வரை ஒரு மாதம் வரை http://tnau.ucanapply.com என்ற இணை யதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிக வும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் ரூ.500ம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியி னர் மாணவர்கள் ரூ.250 விண்ணப்ப கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இணைய தளம் வழியாக மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், துணைவேந்தர் சீதாலட்சுமி கூறு கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு இதுவரை தனித்தனியே மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டு இரண்டு பல்கலைக்கழகத்திற்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் அளிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 14 பாடப்பிரிவுகளுக்கு தனியாக வும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள 6 பாடப் பிரிவுகளுக்கு தனித்தனியாகவும் மாணவர் கள் விண்ணப்பித்து வந்தனர். இதனால், மாணவர்கள் ஒவ்வொரு விண்ணப்பத்திற் கும் தனித்தனியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் மாணவர் களின் நலன் கருதி வேளாண்மை, மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஒரே விண்ணப்பம் அளிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசிய மிருக்காது. வேளாண்மை, மீன்வளப் பல் கலைக்கழகங்களின் இரண்டு பாடப் பிரிவு களில் சேர்வதற்கு அடிப்படை தகுதிகள் ஒரே விதமாக இருப்பதால் விண்ணப்ப பதிவு நடை முறை இணைக்கப்பட்டுள்ளன. முற்றிலும் மாணவர்களின் நலன் கருதியே ஒரே விண் ணப்பம் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது, என்றார்.
சாலை விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்
பள்ளிபாளையம், மே 10- பள்ளிபாளையத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம், பெரியகாடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். விசைத்தறி கூடங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிப்பு செய்து வரும் லேத் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலை யில், புதனன்று காலை மாதேஸ்வரன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே தொழில் நிமித்தமாக தனது கூடத்தில் வேலை செய்யும் செந்தில்குமாரை, தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது, ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாது. இதில் படுகாய மடைந்த லேத் ஆலை உரிமையாளர் சேகர் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத் தனர். ஆனால், சேகர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீ சார் விபத்து குறித்து, அரசு பேருந்து ஓட் டுநர் முருகேசனிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சாலை தடுப்பில் மோதிய பேருந்து இதேபோல சென்னையிலிருந்து கோவை நோக்கி, பள்ளிபாளையம் வழி யாக சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து, ஸ்டேட் வங்கி முன்பு சாலையின் நடுவே தடுப்பில் மோதி விபத் துக்குள்ளானது. இதுகுறித்து கண்கா ணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள் ளது. அரசு பேருந்து ஓட்டுநர் தூக்க கலக் கம் காரணமாக தடுப்பில் மோதினரா? அல்லது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியதா? என்பது குறித்து போலீசார் மற்றும் போக்குவரத்து கிளை அலுவலர்கள் ஓட்டுநரிடம் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவ்விபத்தில் பேருந்தில் பய ணம் செய்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. மேலும், தொடர்ந்து பள்ளிபாளை யம் பகுதியில் சாலை விபத்துக்கள் அதி கரித்து வருவதால் போலீசார் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகன விபத்தை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
கொடிசியாவில் சப்கான் 2023 கண்காட்சி
கோவை, மே 10- கோவை, அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளா கத்தில் சிறு,குறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான சப்கான் 2023 கண்காட்சி நடைபெற்று வருகிறது. மே 10 முதல் 12 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த சப்கான் 2023 கண்காட்சியில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் கோவை பகுதியின் பொருளாதாரமும் வளம் பெரும் வகையில் கொடிசியா இன்டெக் டெக்னா லஜி சென்டர் சார்பில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இக்கண்காட்சி குறித்து சப்கான் 2023 தலைவர் ஜெ. சஞ்சீவி குமார் கூறுகையில், கோவை பகுதியில் சுமார் ஒரு லட் சம் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. கோவை மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் இந்நிறுவனங்க ளின் பங்களிப்பு பெருமளவு உள்ளது. சராசரியாக 20, 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களாக இப்பகுதி தொழில் முனைவோர்கள் உள்ளனர். இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள், துணை பாகங்கள் மற்றும் இயந்திர பாகங்கள், காஸ்டிங்குகள், போர்ஜிங்குகள் ஆகியவை தயாரிக்கும் மையமாகவும் உள்ளது. மேலும், தானியங்கி பம்ப் மற்றும் மோட்டார்கள், ஜவுளி இயந்திர கருவிகள் உள்ளிட்ட துறை களுக்கு தேவையான உதிரி பாகங்கள் பெரும் எண்ணிக்கை அளவில் இங்குள்ள தொழிற்சாலைகள் தயாரிக்கப்படுகிறது. இவையல்லாது வீட்டு உபயோக சானங்கள் தாயாரிக்கும் நிறு வனங்களும், மின்னியல், மின்னனுவியல் துறை சார்ந்த உதிரி பாகங்கள், ஒட்டு மொத்தமாக பொறியியல் துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்றி தரும் மையமாக கோவை திகழ் கிறது. இங்குள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அவர்களுடைய உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு கொடி சியா கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் சப்கான் கண்காட்சியை நடத்தி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட இங் குள்ள பெரிய தொழிற்சாலைகளையும், சிறு, குறு மற்றும் நடுத் தர தொழிற்சாலைகளையும் ஒங்கிணைப்பதே இக்கண்காட்சி யின் நோக்கம். இதன் மூலம் தேவையான ஜாப் ஆர்டர் பணி களையும் பெறமுடியும் என தெரிவித்தார். இந்த கண்காட்சியில் 15 பொதுத்துறை நிறுவனங்கள், 17 பெரும் தனியார் நிறுவனங்கள், ஒரு வங்கி உள்ளிட்ட 214 நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காட்டுயானை பலி
கோவை, மே 10- பொள்ளாச்சி வன கோட் டத்தில் கொம்பன்பள்ளி சர கத்தில் புதனன்று களப்பணி யாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பீடர் கனால் பகுதியில் ஆண் காட்டுயானை ஒன்று படுத்த படி கிடந்ததை கண்டனர். வன ஊழியர்கள் அருகில் சென்று பார்த்த போது, யானை இறந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இத னையடுத்து வன கால்நடை மருத்துவர்கள் யானைக்கு உடற்கூறராய்வு செய்தனர். இறந்த யானையின் உடலிலி ருந்து ஒரு ஜோடி தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.