districts

img

பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் ஆடு விற்பனை அமோகம்

திருப்பூர், ஜூன் 24 - பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குண்டடம் வாரச்சந்தையில் சனியன்று  ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையா னது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சூரியநல்லூர்,  வரப்பாளையம், மேட்டுக்கடை, பொன் னாபுரம், எரகம்பட்டி உள்ளிட்ட 100க்கும்  மேற்பட்ட கிராமங்களிலிருந்து கால் நடைகள் மற்றும் தானிய வகைகளை விற்பனை செய்ய வணிகர்கள் வந்தனர்.  அதே வேளையில் திருப்பூர், பொள் ளாச்சி, கோவை, ஈரோடு, காங்கேயம் மற்றும் கேரள மாநிலப்பகுதிகளில் இருந்தும் இங்கு நடைபெறும் சந் தைக்கு வரும் வியாபாரிகள் ஆடுகள், மாடுகளை வாங்கிச் செல்வர். வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை  கொண்டாடப்பட உள்ள நிலையில் கூடு தலான ஆடுகள் விற்பனை ஆனது. சனி யன்று நடைபெற்ற குண்டடம் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோக மாக நடைபெற்றது. பல பகுதிகளிலி ருந்து வியாபாரிகள் மாடுகளை கொள் முதல் செய்ய வாரச் சந்தைக்கு வந்து குவிந்தனர். அதற்கேற்றாற்போல் கிரா மப் பகுதிகளிலிருந்து ஏராளமான ஆடு கள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள னர். இதில் பக்ரீத் பண்டிகை குர்பானிக் காக செம்மறி ஆடுகள் வரத்து அதிக ரித்ததால் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு கள் ரூ.15 ஆயிரத்துக்கும், ரூ.20 ஆயி ரத்துக்கு விற்பனை செய்யக்கூடிய ஆடு கள் ரூ.25 ஆயிரத்துக்கும் விற்பனையா னது. அதிக அளவில் வியாபாரிகள் வாரச் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங் கியதால் இடைத்தரர்களின் ஆதிக்கம்  அதிகமாக இருந்தது. 90 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப் பட்டதன் மூலம் ரூபாய் 3 கோடிக்கு மேல்  வர்த்தகம் நடைபெற்றுள்ளது என  உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.  மேலும் ஆடுகளின் வரத்து குறித்து  சந்தையில் சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட் டது.