கோவை, ஜூன் 27- வேலை உறுதி திட்டத்தில் பாகுபாடு காட்டாமல் வேலை கேட்கும் அனை வருக்கும் வேலை தர வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆனைமலை வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி யில் பெருந்திரள் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி யில், நகரப்புற வேலைவாய்ப்பு திட் டத்தில் 2021-2022 ல் பதிவு செய்த வேலை அட்டை வழங்கியவர்களில் வெகு சிலருக்கு மட்டும் சில நாட்கள் வேலை கொடுக்கப்பட்டது. பின்னர், வேலை தந்து ஆறு மாதத்திற்குள் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. 2023இல் அனைத்து பதிவான அட்டைதாரர் களுக்கும் உடனடி வேலை தர வேண்டும். புதிதாக வேலை அட்டை கேட்பவர்களுக்கு வேலை அட்டை தந்து வேலை வாய்ப்பு தர வேண்டும். பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் வேலை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பெருந்திரள் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. ஆனைமலை தாலுகா, வேட்டைக் காரன் புதூர் பேரூராட்சி முன்பு நடை பெற்ற இயக்கத்திற்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி, எம்.சாந்தி தலைமை ஏற்றார். ஆனைமலை ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி துவக்கி வைத்து உரை யாற்றினார். கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ. துரை சாமி, தலைவர் தி.ரவிச்சந்திரன் ஆகி யோர் உரையாற்றினார். இதில், நூற் றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கோரிக்கை மனுக் களை தனித்தனியாக அதிகாரிகளை சந்தித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் வழங்கினர்.