மதுரை, மே 12- கூலி உயர்வும் கிடைக்காமல் போதிய வருமானமின்றி தவிக்கும் அப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பள வியாபாரிகளும் உற்பத்தி யாளர்களும் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வை உடனடி யாக வழங்க வேண்டும் என்று சிஐடியு அப்பள தொழிலாளர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் எம்.பாலமுரு கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அப்பள தயாரிப்பின் மூலப் பொருட்களான உளுந்து, சோடா, எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. வீட்டு வாடகை, மின் சாரக் கட்டணம், கல்விக் கட்டணம், அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல் கிறது. ஆனால் அப்பளத் தொழிலா ளர்களுக்கு கூலி உயர்வு தர மறுக்கப் படுகிறது. மதுரை மாவட்டத்தில் 8 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் உட்பட 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அப்பளத்தொழி லில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் தற் போது கடும் சிரமத்தில் வாழ்கிறார்கள். ஜெய்ஹிந்த்புரம், சிந்தாமணி மற் றும் மதுரையை சுற்றியுள்ள அப்பள கம்பெனிகளில் உற்பத்தி செய்யப் படும் அப்பளங்கள், பல்வேறு நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ரவுண்டு அப்பளம், பாய் அப்ப ளம், மிளகு அப்பளம், பூ அப்பளம், சீரக அப்பளம், சோவி அப்பளம், பூண்டு அப்பளம் என பல வகையான அப்பளம் தயாரிக்கும் தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் உயர வில்லை .இந்த தொழிலையே நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு, அப் பள வியாபாரிகளும், உற்பத்தியா ளர்களும், நியாயமான கூலி உயர்வு வழங்கிட பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். கடந்த 7 வரு டங்களுக்கு மேலாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை.
இன்று பல இடங்களில் அப்பள தயாரிப்புக்கான இயந்திரங்கள் வந்துள்ளன. பப்டி மிசின், தண்டு மிசின் என பல வகையான இயந்தி ரங்கள் அப்பள தொழிலுக்குள் வந்து விட்டன. இதனால் தொழிலாளர் களின் நிலைமையோ கேள்விக்குறி யாக மாறியுள்ளது. இயந்திரம் மூலம் வேலைப் பார்க் கும் தொழிலாளர்களுக்கு அதிக நேரம் வேலையும், அதற்கு குறை வான கூலியும் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு சத்தான உண வும் இல்லை. சுகாதாரமான வாழ்க் கையும் இல்லை. இந்த தொழிலா ளர்களை யார் பாதுகாப்பது? அப்பள தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாத்திட போதுமான கூலி உயர்வை வழங்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காலத் தில் சரிவர வேலை இல்லாமல் போதிய வருமானம் இல்லாமல் தவிக்கும் அப்பள தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தொழி லாளர் அனைவருக்கும் விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். வீடு இல்லா தோர் அனைவருக்கும் இலவச வீட்டு மனை, நலவாரிய அட்டையுள்ள அனைவருக்கும் கல்வி உதவி, விபத்து உதவி, திருமண உதவி, முதி யோருக்கான பென்சன் உதவிகளை யும் வழங்க வேண்டும். சுட்டெரிக்கும் வெயிலில் அப்ப ளம் காய்வது போல வறுமையில் உழலும் அப்பளத்தொழிலா ளர்களின் வாழ்க்கை நிலையை பாது காத்திட அப்பள உற்பத்தியாளர் களும் அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.