districts

img

அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு சேலம் ஆட்சியரிடம் மாணவிகள் புகார்

சேலம், நவ.21- அரசு பேருந்தில் மாணவிகளை ஏற்ற மறுப்பதாக குற்றஞ் சாட்டி சேலம் ஆட்சியரிடம் மாணவிகள் புகார் அளித்த னர். சேலம் கோரிமேடு பகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான அரசு விடுதி சேலம் சங்கர் நகர் தமிழ் சங்கம் பகுதியில் உள்ளது. இந்த விடுதியை சேர்ந்த மாணவர்கள் தின மும் கல்லூரிக்கு செல்வதற்காக அண்ணா பூங்கா பேருந்து  நிலையத்திற்கு வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக அரசு பேருந்து ஓட்டுனர்கள், அண்ணா பூங்கா நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்துவதில்லை என்றும், அப்படியே நின்ற தும் ஏறினாலும் ஓட்டுநர்கள் கீழே இறங்க வற்புறுத்துவதா கவும் மாணவிகள் குற்றம் சாட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று புகார் மனு அளித்தனர்.  அரசு பேருந்துகள் தங்களை ஏற்றிச் செல்லாத காரணத் தால் நாள்தோறும் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்தனர். மாணவிகளின் புகார் தொடர்பாக சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர் வாக இயக்குனர் பொன்முடியிடம் கேட்டபோது, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதியளித்தார்.