districts

சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு

கோவை, அக்.19- வால்பாறையை அடுத்த ஊசிமலை எஸ்டேட் பகுதியில்  சிறுத்தை தாக்கி நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பிகேடிக்கு  சொந்தமான ஊசிமலை எஸ்டேட் உள்ளது. இங்குள்ள எஸ்ட்டேட்டில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஐயூன் அன் சாரி (41), இவரது மனைவி நசீரான் தேயிலை தோட்டத் தொழி லாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இத்தம்பதியினரின் நான்கு வயது சிறுமி தோட்டத்து அரு கில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே  பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில், சிறுமியை வாயில் கவ்வி கொண்டு செல்ல முற்பட்டது.  இதனைக்கண்டு, அவருடைய தாயார் மற்றும் அங்கிருந்தவர் கள் பெரும் குரல் எழுப்பினர். இதனையடுத்து, சிறுமியை அப்பகுதிலேயே போட்டுவிட்டு வனத்திற்குள் சென்றுவிட் டது. அருகில் சென்று பார்த்தபோது, சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. சம்பவம் அறிந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுத்தைகள் சமீப காலமாக தென்படுகிற நிலையில், தற்போது சிறுமியை தாக்கி கொன்ற சம்பவம் அப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.