திருப்பூர், ஜன.20- பெருமாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில், பெண் குழந் தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் வடக்கு பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் ஈ. விஜயசித்ரா தலை மையில், “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம்” என்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழியை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஆங்கில ஆசிரியர் ப.புனிதவதி சிறப்புரையாற்றினார். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெண்கள் பாதுகாப்பிற்கு இயன்ற முயற்சி எடுப்பதாக உறுதி அளித்தனர்.