நாமக்கல், பிப்.23- நாமக்கல்லில் நடைபெற்ற, மாநில பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாநில பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ”பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு பேர ணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி யானது நாமக்கல் நகர காவல் நிலையம் வரை சென்று மீண்டும் கல்லூரி வரை சுமார் 2 கி.மீ தூரம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், சமூக நலத்துறை அலுவ லர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.