districts

img

மாணவர்கள் கேள்வி கேட்க பழகி கொள்ளுங்கள்

தருமபுரி, மார்ச் 9- மாணவர்கள் கேள்வி கேட்கும் பழக் கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டு மென தமுஎகச மாநில பொதுச்செய லாளர் ஆதவன் தீட்சண்யா அறிவுறுத் தினார்.  தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் விலங்கியல் மன்ற சார்பில் விழா நடைபெற்றது. இவ்வி ழாவிற்கு கல்லூரி முதல்வர் ப.கி.கிள்ளி வளவன் தலைமை வகித்தார். விலங்கி யல் துறைத்தலைவர் முனைவர் இ. விஜயதேவன் வரவேற்றார். தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா “மாண வர்களை செதுக்கும் இலக்கியங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசுகையில், உலகத்தி லேயே இந்தியாவில்தான் செல்போன் பார்க்கும் நேரம் அதிகரித்துள்ளது. இத னால் பெரிய பயன் ஒன்றும் இல்லை. நாம் வசிக்கும் வீடுகளில் பல்வேறு அறைகள் இருக்கும். ஆனால், நூல கத்துக்கென்று ஒரு தனி அறை இருக் காது. புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதில், 12 ஆயிரம் வருடங்களுக்கு முன் விவசாயம் எப்படி உருவானது, 50 ஆயிரம் ஆண்டுக ளுக்கு முன் மனிதன் எவ்வாறு பேச கற் றுக்கொண்டான் என்பது குறித்து படித் தால் மட்டும் தான் நமக்கு தெரியும். படிப்பதின் மூலம் சொல் வளமும், பல ஆயிரம் வார்த்தைகள் தெரிந்து கொள்ள முடியும். நம்மால் நிலப்பரப்பு பற்றியும், உழைப்பு, கற்பனை ஓவியம் இவற்றை தெரிந்துகொள்ள முடியும், கலை- இலக்கியங்களை கற்றுக் கொள்ள முடியும். வாசிப்பதன் மூலம் எழுத்தாளர், கவிஞர்,  கலைஞர், விஞ் ஞானி ஆகலாம். படிப்பு மட்டுமே உங்க ளின் அடையாளத்தை தீர்மானிக்கும்  நிலையில், நாம் மனிதனாக இருக்க  வேண்டும். சமுதாய நடப்புகளையும் தெரிந்து கொள்ளவேண்டும். மனிதன் இயந்திரங்கள் மூலம் மட்டுமே இயங்க முடியாது. மனித மூளை மிக முக்கியம். மனிதனின் ஆற்றலால் மட்டுமே சுதந்திர மாக இருக்க முடியும். படிக்கும் பழக் கத்தையும், கேள்விகேட்டும் பழக்கத் தையும் உருவாக்கிக்கொள்ள வேண் டும் என தெரிவித்தார்.  முன்னதாக, விலங்கியல் துறையில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங் கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் விலங்கி யல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள்,  மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.