சேலம், ஜன.24- நியாய விலைக்கடை யில் ஸ்மார்ட் கார்டு குளறு படிகளை போக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க சங்க கிரி தாலுகா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சங்ககிரி தாலுகா மாநாடு பானுமதி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் என்.ஜெயலட்சுமி அறிக்கையை சமர்பித்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கே. ராஜாத்தி, மாதர் சங்க போராட்ட வரலாறு குறித்து சிறப்புரையாற்றினார். இம்மாநாட் டில், சங்ககிரி பகுதியில் வீடு இல்லாத அனை வருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். பெண்களுக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கூடுதலாக வேலை வழங்க வேண்டும். நியாய விலைக் கடை களில் ஸ்மார்ட் கார்ட் குளறுபடிகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாதர் சங்க சங்ககிரி தாலுகா தலைவராக காந்திமதி, செயலாள ராக வி.மோகனா, பொருளாளராக எஸ். சுமதி, துணைத் தலைவராக என்.ஜெயலட் சுமி, துணை செயலாளராக செல்வி உட்பட 13 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய் யப்பட்டது.