districts

img

புவிசார் குறியீடு கிடைச்சிருச்சு; ஆனால் ஜவ்வரிசி தொழில் காலி

சேலம் சேகோ சர்வ், தெற்கு ஆசி யாவிலேயே மிகப்பெரிய தொழில் கூட்டுறவு சங்கமா கும். இந்த சேகோ சர்வில் 374 உறுப்பினர் கள் உள்ளனர். நாட்டிலேயே ஜவ்வரிசிக்கு என்று ஒரே ஒரு விற்பனை கேந்திரமாக சேகோ சர்வ் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1943 ஆம் ஆண்டு, சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர் முதன்முதலில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி உற்பத்தியைக் கொண்டு வந்தார். இவர்தான் இந்தியாவில் ஜவ்வரிசி உற்பத்தியை அறிமுகம் செய்தவர். அதன் பின் வெங்கடாசலம் கவுண்டர் என்பவரு டன் சேர்ந்து ஜவ்வரிசியை விற்பனைக்குக் கொண்டு வந்தார். 1948 ஆம் ஆண்டு முதல் ஜவ்வரிசி முழுமையாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மரவள்ளிக்கிழங்கு சாகு படியில் முதன்மையாக விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் குறிப்பாக ஆத்தூர், கெங் கவல்லி, வீரகனூர், தலைவாசல், பெத்த நாயக்கன்பாளையம், வாழப்பாடி, கருமந் துறை உள்ளிட்ட பகுதிகளில் மக்காச் சோளத்திற்கு அடுத்தபடியாக மரவள்ளி பயி ரிடுதல் பிரதானமாக உள்ளது. இப்பகுதி களில் மட்டும் 32 ஆயிரம் ஹெக்டேர் பரப்ப ளவில் மரவள்ளி பயிரிடப்பட்டு வருகிறது. சேலம் மட்டுமின்றி நாமக்கல், கள்ளக் குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, ஈரோடு உள் ளிட்ட மாவட்டங்களிலும் கணிசமாக மரவள்ளி  பயிரிடுதல் முதன்மையாக உள்ளது. மரவள்ளிக் கிழங்கை நேரடி உணவாகப் பயன்படுத்தி  வருவது ஒருபுறம் இருக்க, அதில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் உற்பத்தி செய்யப் பட்டு வருகின்றன. இதில் ஜவ்வரிசியானது, தமிழ்நாட்டைவிட வடமாநிலங்களில் முக்கிய  உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுவ தால், அங்கு இதற்கு பெரிய அளவில் சந்தை வாய்ப்புள்ளது. ஸ்டார்ச் மாவு மருந்து, மாத் திரை தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிப்பதால் அதற்கும் ஆண்டு முழுவதும் வணிக வாய்ப் புள்ளது. சேலத்தில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி கூடுதல் தரமாக உள்ளது. இதனாலேயே ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் சேர்த்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் தர ஆய்வு மற்றும் வணிக ஒருங்கி ணைப்பிற்காக சேலத்தில் சேகோ சர்வ் கூட்டு றவு நிறுவனத்தை அரசு தொடங்கி செயல் படுத்தி வருகிறது.

புவிசார் குறியீடு:

தனித்துவம் வாய்ந்த சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்க கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சேகோ சர்வ் தரப்பில் முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங் கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை, தமி ழக புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட் களின் அதிகாரம் பெற்ற அலுவலர் சஞ்சய் காந்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தி டம் வழங்கும் விழா, சேகோ சர்வ் நிறுவனத் தில் ஆக.26 ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்தியா முழுவதும், இதுவரை 490 பொருட் களுக்கும், தமிழ்நாட்டில் மட்டும் 59 பொருட்க ளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள் ளது. சேலத்தைப் பொறுத்தவரை வெண்பட்டு, மல்கோவா மாம்பழம் ஆகியவற்றுக்கு ஏற்க னவே புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள நிலை யில், தற்போது சேலம் ஜவ்வரிசிக்கும் இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன்மூலம் ஜவ் வரிசி உற்பத்தியில் தனித்துவம், நம்பகத் தன் மையை மேம்படுத்தும்.

உற்பத்தியை பாதிக்கும் ஜிஎஸ்டி

தமிழ்நாட்டில் மரவள்ளிக்கிழங்கு உற் பத்தி 22 மாவட்டங்களில் 25 ஆயிரம் ஹெக்டே ராக இருந்து வருகிறது. இருப்பினும் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால், உற்பத்தி பெரு மளவில் பாதிக்கப்பட்டுள்ளது என உற்பத்தி யாளர்களும், மரவள்ளி விவசாயிகளும் வருத் தத்துடன் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஸ்டார்ச் மாவுப்பொருட்களுக்கு 12 சதவிகித மும், ஜவ்வரிசிக்கு 5 சதவிகிதமும் ஜிஎஸ்டி  வரி விதிக்கப்படுகிறது. சராசரியாக ரூ.1000 கோடிக்கு அதிகமாக நடைபெறும் ஜவ்வரிசி உற்பத்தி, தற்போது பாதியாக குறைந்துள் ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் மர வள்ளி விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

ஜவ்வரியில் கலப்படம்

ஜவ்வரிசி தயாரிக்க பயன்படும் மரவள்ளிக் கிழங்கு தோலில் சயனைடு என்னும் விஷம் கணிசமாக உள்ளது. இத்தோலை சீவி எடுத்த பின்பு கிடைக்கும் கிழங்கை ஜவ்வரிசி செய்து  வருவது நடைமுறையில் இருந்து வருகிறது. காலப்போக்கில் தோலை சீவி எடுக்க ஆள்  கிடைக்காததோடு கூடுதல் செலவு என்பதால்  உற்பத்தியாளர்கள் அப்படியே அரைத்து நடை முறைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும், வெள்ளை நிறம் வேண்டும் என்பதற்காக துணி வெழுக்க பயன்படுத்தப்படும் சோடியம் ஹைபோ குளோரைடு, கால்சியம் ஹைபோ குளோரைடு போன்ற ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன. கந்தக அமிலமும் சேர்க் கப்படுகிறது, இதனால் ஜவ்வரிசியை பயன் படுத்துவோர் உடல்நலம் பாதிக்கப்படும். மக் காச்சோளம் மாவு விலை குறைவாக உள்ள தால் அதையும் மரவள்ளியுடன் கலந்து உற் பத்தி செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் அதி கம் வருகிறது. இதனால் ஒரு மூட்டைக்கு ஆயி ரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்பதால், உற்பத்தியாளர்கள் ஜவ்வரிசியில் அதிக கலப் படத்தை செய்து வருவதாகவும், சேகோ சர்வ் நிர்வாகம் கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரி வித்துள்ளனர்.

பின்னுக்கு செல்லும் சேகோ நிறுவனம்

சேலத்தின் புகழ்பெற்ற சேகோ சர்வ் நிறு வனம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 1000 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தியில் பெரும் சாதனை படைத்திருந்தது. ஆனால், 2022-23 ஆம் ஆண்டு லாபம் வெறும் 4.2  கோடி ரூபாய் மட்டுமே. தற்போது நிறுவனத் தின் மொத்த உற்பத்தி மற்றும் வருவாய் விகி தம் பாதியாக குறைந்துள்ளதாக உற்பத்தி யாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தெரிவித் துள்ளனர். இதற்கு காரணம் ஜவ்வரிசியை நேர டியாக சேகோ சர்வ் நிறுவனத்திற்கு கொள் முதல் செய்யாமல், சில தனியார் பெரும் முத லாளிகள் நேரடியாக கொள்முதல் செய்வதால்  சேகோ சர்வ் நிறுவனத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இதனை நம்பி யுள்ள பணியாளர்கள் மற்றும் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் பாதிப்படுகிறது. எனவே,  அரசு உரிய தலையீடு செய்து சேகோ சர்வ்  மூலம் மட்டுமே அனைத்து உற்பத்தியாளர்க ளும் உரிய தரப ரிசோதனை செய்து கொள் முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உற்பத்தியை பெருக்குவது அரசின் கடமை சேலத்தின் பாரம்பரியமான சேலம் ஜவ் வரிசிக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத் துள்ளது. ஆனால், அதனை நம்பியுள்ள தொழி லாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ் வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. சேலம் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட சேகோ தொழிற்சாலைகள் இருந்த நிலை யில், தற்போது 400 தொழிற்சாலைகளாக சுருங்கியுள்ளது. 150க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் இயங்க முடியாத நிலையில் உள் ளன. அரசு உரிய தலையீடு செய்து கூட்டுறவு பண்டக சாலைகள், பள்ளி கல்லூரிகளில் ஜவ் வரிசி பயன்பாட்டை விற்பனைக்கு கொண்டு  வர வேண்டும். குறிப்பாக, ஜிஎஸ்டி வரி விலக்கு  அளிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மரவள்ளிக்கிழங்கு விவ சாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் பிர தான கோரிக்கையாக உள்ளது. எழில், சேலம்