ஈரோடு, மார்ச் 17- மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஈரோட்டில் வெற்றிகரமாக்குவது குறித்து அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் சார் பில் கருத்தரங்கம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டத்தை ரத்து செய்து, பொதுத்துறை நிறுவனங் களை பாதுகாக்க வேண்டும். தொழி லாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இப் போராட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் வெற்றிகரமாக்குவது குறித்த கருத் தரங்கம் ஈரோடு பெரியார் மன்றத்தில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆர்.மணி தலை மையில் நடைபெற்றது. இதில், “எங்கள் செல்வம் கொள்ளை போகவோ, நாங்கள் சாகவோ” என்ற தலைப்பில் ஒன்றிய அரசின் கார்ப்பரேட், தனியார் ஆதரவு கொள்கை மற்றும் ஊழியர் விரோத மக் கள் விரோத கொள்கைகளை விரிவாக எடுத்துரைத்து சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் கருத்துரை வழங்கினார். “தமிழகத் தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சவால்களும், கடமைகளும்” என் னும் தலைப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலா ளர் ஆ.செல்வம் உரையாற்றினார். நிறைவாக இந்திய வங்கி ஊழியர் கள் சம்மேளன மாவட்ட செயலாளர் ஆர்.பூவேந்திரன் நன்றி கூறினார்.