districts

img

அரசியல் ஆதாயத்திற்காக அமைதியை சீர்குலைப்பதா? சென்னிமலையில் மதச்சார்பற்ற கட்சிகள் பொதுக்கூட்டம்

ஈரோடு, நவ.1- அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை அம்பலப்படுத்திட மதச்சார் பற்ற கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட் டத்தை நவம்பர் 9 ஆம்தேதி சென்னி மலையில் நடத்துவது என முடிவெடுக் கப்பட்டுள்ளது. மக்களிடையே தேவையற்ற பதற் றத்தை, அமைதியற்ற சூழலை உரு வாக்கி  அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயற்சியை முறியடிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார் பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டிருந்தது.  இதன்படி,  மதச்சார்பற்ற கட்சிகள் பங்கேற்ற ஆலோ சனை கூட்டம் ஈரோடு வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. இதில் சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிர பாகரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் முன்னிலை வகித்தார்.  இக்கூட்டத்தின் முடிவாக நவம்பர் 9  ஆம்தேதி பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் சென்னிமலையில் நடத்துவது, இப்பொதுக்கூட்டத்தில், தமிழக அமைச் சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநா தன், மார்க்சிஸ்ட் கட்சியின் சிபிஎம்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக நிறுவன தலைவர் தொல்.திருமாவள வன் எம்பி, சிபிஐ தேசிய நிர்வாகக்குழு  உறுப்பினர் கே.சுப்பராயன் எம்பி, முஸ் லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய் தீன், தமுமுக தலைவர் எம்.எச்.ஜவா ஹிருல்லா எம்எல்ஏ, திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை சந்திரசேக ரன், மதிமுக பொருளாளர் மு.செந்தில திபன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் டி.வேல்முருகன் எம்எல்ஏ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரனி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி, மற்றும் சிபிஐ மாநில துணைச்செயலாளர் நா.பெரியசாமி ஆகியோர் பங்கேற்ற உள்ளனர்.  முன்னதாக, ஆலோசனை கூட்டத் தில், திமுக மாநகர செயலாளர் மு.சுப்பி ரமணியம், காங்கிரஸ் கட்சியின் மக்கள் ராஜன், சிபிஎம் ப.மாரிமுத்து, ஜி.பழனிசாமி, பி.பி.பழனிசாமி, ஆர்.கோமதி, சிபிஐ டி.ஏ.மாதேஸ்வரன், எம். குணசேகரன், எஸ்.சின்னசாமி, முஸ் லீம் லீக் முகமது ஆரிப், விசிக மாவட் டச் செயலாளர் சாதிக், தமிழக வாழ்வு ரிமை கட்சியின் மணிகண்டராஜா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலை வர் சித்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக சிபிஎம் மூத்த தோழர் கே.துரைராஜ் நன்றி கூறினார்.