districts

பொதுக் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் பொது மாநாடு

கோவை, பிப்.10-  கோவை மண்டல பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின்   சார்பில்  அரசுத்துறை பொதுக் காப்பீட்டு ஊழி யர்களின் 28 ஆவது பொது மாநாடு  நடைபெற்றது. கோவை மண்டல பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின்   சார்பில்  அரசுத்துறை பொதுக் காப்பீட்டு ஊழி யர்களின் 28வது பொது மாநாடு கோவை திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலகம் அரு கில் சரோஜ் நிலையத்தில் சனியன்று  நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தின் மாவட்ட தலைவர் எம்.கருப் பையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் என்.சதீஸ்குமார் வர வேற்றார். பொதுச்செயலாளர் ஆர். வேணுகோபால் வேலை அறிக் கையை முன்வைத்தார்.  இதில், இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜி.எஸ்.டி. ரத்து செய்யப் பட வேண்டும். 01.08.2022 முதல் ஊதி யத் திருத்தம் அளிக்கப்பட வேண் டும். வளர்ச்சி அதிகாரிகள் உட்பட  அனைத்து நிலைகளிலும் ஊழியர் கள் நியமனம் நடைபெற வேண்டும். அனைத்து பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன் றாக இணைக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில், தென் மண்டல  அமைப்பின் பொறுப்பாளர்கள் எஸ். வி.சங்கர், எஸ்.பாலசுப்ரமணியம், வி.சுரேஷ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாநாட்டில், சங்கத்தின் தலைவராக எம்.கருப்பையா, பொதுச் செயலாளராக ஆர்.வேணு கோபால், பொருளாளராக என்.கோவிந்தராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் என்.பத்ம நாபன் நன்றி கூறினார்.