districts

img

எல்லா தளத்திலும் பாலின நிகர் நிலை பயிற்சி

விழுப்புரம், நவ. 6- உரிமைக்கான போராட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து முன் னெடுப்போம் என்றும் பாலின நிகர்  நிலை பயிற்சியை எல்லா தளத் திலும் கொண்டு செல்ல வேண்டும்  என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் “இன்றைய அரசி யலும் திருநர் சமூக பிரச்சனை களும்” என்ற தலைப்பில் கலந் துரையாடல் நிகழ்ச்சி விழுப் புரத்தில் சனிக்கிழமை (நவ.5) நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். கட்சியின் மத்திய குழு  உறுப்பினர் பி.சம்பத் திருநர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.  மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி பேசுகையில், நீங்கள் கோர்வையாக முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசின் கவனத் திற்கு கொண்டு செல்லப்படும்.

பாலின நிகர் நிலை பயிற்சியை எல்லா தளத்திலும் கொண்டு செல்ல வேண்டும், நிகர்நிலைப் பயிற்சி ஆண், பெண்ணோடு நிறுத்திக் கொள்ளாமல், மாறிய பாலினம் பயிற்சியாக கொண்டு செல்ல வேண்டும். மாறிய பாலி னத்தை நூற்றுக்கு 99 விழுக்காட் டினர் குடும்பத்தினரால் கைவிடப் படுகின்றனர். இவர்களுக்கு வாடகைக்கு வீடு  கிடைப்பதில் பிரச்சனை உள்ளது. எங்கு சென்றாலும் முகம் தெரியாத வர்கள் கேலி கிண்டல் செய்யும் நிலை உள்ளது. சில காவல் துறை யினரின் நடவடிக்கைகளும் மோச மாக உள்ளது. காவல் துறையி னரும், அரசு அதிகாரிகளும், பொது மக்களும் இவர்களை கனிவோடு  பார்க்க வேண்டும்.

நமக்கு கண்ணி யமான வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு அழுத்தம் இருக்கிறது. மருத்து வமனைகளில் அறுவை சிகிச்சை  காப்பீடு திட்டத்தில் செய்யும்  போது தனியார் மருத்துவமனை யிலும் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். சமத்துவ சமூகம் படைக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. சமூகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கும் சம உரிமை உண்டு என்று நிரூபித்து காட்டிய வர லாறு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள் ளது. தலித், பழங்குடியின மக் கள் என அனைத்து பாதிக்கப்பட்ட வர்களுக்காகவும் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகி றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உங்களுக்காக குரல் கொடுக்கும், போராடும். உரிமைக்கான போராட் டத்தை அனைவரும் ஒன்றி ணைந்து முன்னெடுப்போம், என் றார்.