districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காரிப்பட்டி காவல் நிலையம் சேலம் மாநகரத்துடன் இணைப்பு

சேலம், ஜன.22- ஆட்டையாம்பட்டி, காரிப்பட்டி உள்ளிட்ட காவல் நிலை யங்களை சேலம் மாநகர காவல் நிலையத்தில் இணைக்க  அரசாணை வெளியிடப்பட்டது. சேலம் மாநகர காவல் நிலைய எல்லையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு மாவட்ட காவல் நிலையங்களான ஆட் டையாம்பட்டி, காரிப்பட்டி பகுதிகளை இணைக்க, கடந்த  பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதல்வர் அரசாணை வெளியிட்டார். இதில் இரண்டு காவல் நிலையங்களும் மாநகர காவல் நிலையத்துடன் இணைப்பு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. இந்நிலையில், சேலம் மாவட்ட காவல்துறையில் உள்ள ஆட்டையாம்பட்டி, காரிப்பட்டி ஆகிய இரு காவல் நிலையங்கள் மாநகர காவல் நிலையத்தில் இணைக்கும் அரசு ஆணையை செயலாளர் அமுதா வெளியிட்டார். இதை யடுத்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தை மாநகர காவல் நிலையமான கொண்டலாம்பட்டி காவல் நிலையத் துடன் இணைப்பதற்காக சேலம் மாநகர காவல் ஆணையர்  விஜயகுமாரி ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு ஞாயி றன்று வந்தார். அப்போது ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வா ளர் அம்சவல்லி, மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரிடம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தின் பொறுப்புகளை ஒப் படைத்தார்.

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை

சேலம், ஜன.22- அரசு பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பொ.சங் கர் அறிவுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, அனைத் துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளருமான பொ.சங்கர் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சிய ரகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஆட்சி யர் செ.கார்மேகம் முன்னிலை வகித்தார். இதன்பின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பொ.சங்கர் கூறுகையில், ஆசிரியர் பணி என் பது சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் மகத் தான பணி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசுபள்ளிகளில் ஆரம்ப நிலை யில் இருந்தே குழந்தைகள் சரளமாக தாய் மொழியில் பேசவும், எழுதவும் திறமையுடை யவர்களாக இருப்பதை உறுதி செய்ய  வேண்டும். மேலும், அரசு பொதுத்தேர்விற் குத் தயாராகும் மாணாக்கர்களுக்கு ஆசிரி யர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் அடிக்கடி பள்ளிகளுக் குச் சென்று ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய வேண்டும். அதேபோன்று, கல்வி பயிலும் காலங் களிலேயே என்னென்ன வேலைவாய்ப்புக ளுக்கு, எங்கெல்லாம் அதிக முக்கியத்துவம் உள்ளது என்பது குறித்தும், அதற்கு ஏற்றார் போல் தங்களது திறமைகளை மேம்படுத் திக்கொள்ளும் வகையில் செயல்படுத்தப் பட்டுவரும் நான் முதல்வன் திட்டத்தால் படிப்பு முடிந்தவுடன் தங்களுக்கான பணி களை உடனடியாகத் தேர்வு செய்யும் வகை யில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாண வர்கள் அடைந்துள்ள பயன்கள் குறித் தும் ஆய்வு செய்யப்பட்டது. என்றார். முன்னதாக, திங்களன்று காலை சேலம் மாநகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலை மேம்பாலப் பணியினையும், மல்லூரி பேரூராட்சிப் பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.95.52 கோடி மதிப்பிலான பல் வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பொ.சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந் நிகழ்வுகளில், மாநகராட்சி ஆணையர் சீ.பாலச் சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.

சாலை விபத்தில் ஒருவர் பலி

உடுமலை, ஜன.22- மடத்துக்குளம் தாலுகா ஜோத்தம்பட்டி ஊராட்சி அரிய நாச்சி பாளையம் பகுதியை சேர்ந்த சதிஷ்குமார் (30) 21 ஆம்  தேதி சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநில மாநாட் டிற்கு சென்று விட்டு திருப்பி வரும் போது சங்ககிரி என்ற  இடத்தில் நடந்த விபத்தில் மரணம் அடைந்து உள்ளார். மரணம் அடைந்த சதிஷ்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் தெரி வித்து குடும்ப நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் பிரகாஷ் மற்றும்  திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராம கிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள். மாநாட்டிற்கு சென்ற  இளைஞர் சாலை விபத்தில் மரணம் அடைந்தது இப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஜன.22- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  நடை பெற்ற ஏலத்தில் சுமார் 116  விவசாயிகள் கலந்து கொண்டு 780 மூட்டைகள் நிலக்கடலையை ஏலத்திற்கு  கொண்டு வந்து இருந்தனர்.  திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு சுற்று வட்டார வியாபாரிகள் 5 பேர்  கலந்து கொண்டனர். மறை முக ஏலத்தின் வாயிலாக நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ. 8,000 முதல் ரூ.8,280 வரையி லும், இரண்டாம் ரகம் ரூ.7, 500 முதல் ரூ.8,000 வரையி லும், மூன்றாம் ரகம் ரூ.6,000 முதல் ரூ.7,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16,50 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.

பழுதான சாலையை சீரமைக்க கோரிக்கை

உதகை, ஜன.22- சேரம்பாடி அரசு நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை  குண்டும், குழியுமாக இருப்பதால் விரைந்து சீரமைக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு  ஊராட்சிக்குட்பட்ட சேரம்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள் ளிக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக  காணப்படுவதால், அவசர தேவைகளுக்குகூட மக்கள் இந்த  சாலையில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே, பழுதடைந்து காணப்படும் இச்சாலையை விரைந்து  சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள் ளனர்.

மறைந்த தங்கையின் நினைவாக கலையரங்கம் 

கோவை, ஜன.22- சூலூர் அருகே உயிரிழந்த தனது தங்கை பயின்ற பள்ளிக்கு அவரது நினைவாக கலையரங்கம் கட்டிக் கொடுத்த, தொழிலதிபர் ஒருவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கணபதிபாளையத் தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயின்ற முருகேசன் என்பவர், மணி மேகலை டெக்ஸ் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தங்கை மணிமேகலை, அந்த அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து  வந்தார். பள்ளியில் சிறந்த மாணவியாகவும் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் எதிர்பாராத விதமாக முரு கேசனின் தங்கை மணிமேகலை உயிரிழந்தார். இத னால், மணிமேகலை படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய  வேண்டும் என முருகேசன் எண்ணியுள்ளார். அதன்படி, தனது  தங்கையின் நினைவாக அவர் படித்த அரசு பள்ளிக்கு, கலை யரங்கம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். மேலும், ஒன்றரை  லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கி உள்ளார். இந்த கலையரங்கம் திங்களன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்வில்  ஊர் பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி குழந்தை கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

3 லட்சம் புதிய மலர் செடிகள்

உதகை,ஜன.22- குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 3 லட்சம் புதிய மலர் செடி கள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலை இணை இயக்கு னர் சிபிலா மேரி திங்களன்று துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே மாதம்  பழ கண்காட்சி நடைபெற உள்ளது. அதை, முன்னிட்டு அதற் கான ஆயத்தப் பணிகளான மலர் செடிகள் நடவு செய்யும்  பணி திங்களன்று துவங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் துவங்க உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்க வெளிநாடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட மலர் செடிகள் மற்றும் 125 வகை யான உள்நாட்டு மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட் டுள்ளது. இதில் வெளிநாட்டு வகையான சால்வியா, ஆண்ட் ரினம், பால்சம் போன்ற நாற்றுகள் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து வரவழைக் கப்பட்டு, திங்களன்று 3 லட்சம் நாற்றுக்கள் நடவு செய் யப்பட்டது என தோட்டக்கலை துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வெறிச்சோடி காணப்பட்ட கவியருவி

கோவை, ஜன.22- கோவையின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் கவிய ருவியில், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து வெறிச் சோடி காணப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளது ஆழி யார் அணை மற்றும் கவியருவி. கோவையின் முக்கிய  சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதிக்கு, உள்ளூர் மக்கள்  மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த  மக்களும் வந்து செல்வது வழக்கம். கடந்த பொங்கல் விடுமுறையை ஒட்டி  பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து சென் றனர். இந்நிலையில், விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந் துவிட்டதால், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், அங்குள்ள சிறு வியாபாரிகளின் வருமானம் கடுமையாக குறைந்தள்ளது. 

பூங்காவின் கேட்டை சேதப்படுத்திய யானைகள்

ஈரோடு, ஜன.22- பவானிசாகர் அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பூங்காவின் கேட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பூங்கா  அமைந்துள்ளதால், வனப்பகுதியை விட்டு  வெளியேறும் யானைகள் இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமையன்று இரவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய இரு காட்டு யானைகள் பண்ணாரி சாலை வந்து அங்கிருந்து பவானிசாகர் பகுதிக்கு சென்றது. சிறிது நேரத்தில் பவானிசாகர் பூங்கா தடுப்பு கேட், கம்பி வேலியை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த பூங்கா ஊழியர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அப்பகுதி மக்களே பட்டாசு வெடித்து  யானைகளை விரட்டினர். மீன் பண்ணை வழி யாக மீண்டும் வனப்பகுதிக்குள் யானை கள் சென்றன. வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளி யேறும் யானைகளால் பயிர்கள் அதிக அள வில் சேதமாகி வருகின்றன. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழி கள், ஆழமாக இல்லாததால் மண் மூடி  கிடக்கிறது. இதனால் யானைகள் சுலபமாக  ஊருக்குள் புகுந்து விடுவதாக பொதுமக் கள் குற்றம் சாட்டை முன் வைக்கின்றனர்.

ஆவாரங்குளத்தில் 2ஆம் கட்ட புனரமைப்புப் பணிகள் தொடக்கம்

கோவை, ஜன.22- கோவை - சத்தியமங்கலம் சாலை யில் உள்ள ஆவாரங்குளத்தில் இரண் டாம் கட்ட புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. கோவை சத்தியமங்கலம் சாலை யில் எல்லப்பாளையம் - கரியாம்பா ளையம் பகுதியில் நெடுஞ்சாலை யையொட்டி 86 ஏக்கர் பரப்பளவில் ஆவாரங்குளம் உள்ளது. வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த  குளம் தமிழக அரசால் செயல்படுத் தப்பட்டு வரும் அவிநாசி - அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மூலம் பயன்பெற்று, சுற்றியுள்ள 10  கி.மீ. தொலைவுக்கு நிலத்தடி நீராதா ரமாக பயனளிக்க உள்ளது. இந்நிலையில், ஆவாரங்குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிப்பதற்காக கௌசிகா நீர் கரங்கள் கூட்டமைப் பின் முயற்சியால் ஆவாரங்குளம் பாது காப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், தனியார் நிறுவனங்கள் மட்டு மின்றி தன்னார்வலர்களும் பங்காற்றி வருகின்றனர். இக்குளத்தின் உள்புறத்தில் முதல்கட்டமாக ரூ.20 லட்சம் மதிப் பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட்டன. இந்நிலையில், குப்பேபா ளையம் ஜெகோரான்ஸ்கி தனியார் நிறு வனத்தின் பங்களிப்புடன் இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகள்,  தொடங்கப் பட்டுள்ளது.

குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?

கோவை, ஜன.22- குனியமுத்தூர் ஜே.ஜே.நகர் பகுதி யில் சிறுத்தை நடமாட்டம் இருப்ப தாக கிடைத்த தகவலை தொடர்ந்து  வனத்துறையினர் அந்த பகுதியில்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர். கோவை குனியமுத்தூர் ஜே.ஜே. நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த  நாய் மற்றும் பூனை உள்ளிட்ட விலங்கி னங்கள் மர்மமான முறையில் காணா மல் போனது.  இந்நிலையில் அந்த பகு தியில் சிறுத்தை நடமாட்டம் இருப் பதாகவும், நாய், பூனை போன்றவற்றை சிறுத்தை வேட்டையாடுவதாகவும் தகவல் பரவியது. அபராமி நகர்,  சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட  பகுதி களிலும் நாய், பூனை போன்றவை மாயமாகின. இதனையடுத்து அப்பகுதி  மக்கள் இது குறித்து மதுக்கரை வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலின் பேரில் வருகை புரிந்த மதுக்கரை வனத்துறையினர், ஜே.ஜே.நகர், அபிராமி நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள புதர்கள், பாழ டைந்த கட்டிடங்கள் போன்றவற்றில்  சந்தேகப்படும் படியான விலங்கி னங்கள் ஏதேனும்  இருக்கிறதா? என் பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த பகுதிகளில் வனத்து றையினர்  கண்காணிப்பு கேமராவை யும் பொருத்தி உள்ளனர். சிறுத்தை இருப்பதாக வெளியான தகவல் காரண மாக ஜே. ஜே நகர் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மின்தடை

கோபி, ஜன.22- கோலப்பூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகு திகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோலப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், யூனிட்டி நகர்,  காமராஜர் நகர், செட்டிபாளையம், நல்ல நாயக்க னூர், அங்கம்பாளையம், சாணார்பாளையம், லிங்கப்பக்க வுண்டன் புதூர், குமரன் காலனி, அம்மன் கோவில்பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி, சொக் கும்மாறிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று  (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநி யோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு

ஈரோடு, ஜன. 22- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் ஈரோடு, நெசவாளர் காலனி கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு காயத்ரி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளா ளர் ராஜு, ஈரோடு நகரச் செயலாளர் செந்தில்குமார் ஆகி யோர் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின நகரச்  செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்தி பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் செல்லமுத்து, ரேணுகா, நகரப் பொரு ளாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கிளையின் தலைவராக காயத்ரி, செயலாளராக சங்கீதா,  பொருளாளராக கோமதி, கமிட்டி உறுப்பினர்களாக நெப் போலியன், உக்கிரசாமி, பாஸ்கரன், கவிதா, இப்ராஹிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கணவன் தற்கொலை

ஈரோடு, ஜன.22- ஈரோடு, புஞ்சை துறை யம்பாளையம் கல்ரமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(30). இவரு டைய மனைவி  தமிழரசி.அஜித் குமாருக்கு குடிப்ப ழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில். மன முடைந்த அஜித்குமார் வீட் டில் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

திருமண உதவித்தொகை வழங்கல்

உதகை, ஜன.22- உதகையில் 479 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடி திருமண  உதவித்தொகை மற்றும் 3 கிலோ தங்கம் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு  மையத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திங்களன்று திருமண உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்தார்.  சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக பங்கேற்று, பட்டப்படிப்பு பயின்ற மகளிருக்கு திரு மண உதவித்தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் 328 பய னாளிகளுக்கு ரூ.1.64 கோடி மற்றும் பட்டப்படிப்பு அல்லாத  மகளிருக்கு திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரம் வீதம் 151  பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் என மொத்தம் 479 பயனா ளிகளுக்கு ரூ.2,01,75,000 நிதியுதவியும், 3.08 கிலோ தங்க மும் வழங்கினர். அப்போது அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசு கையில், பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி, பெண்கள் சமுதாயத்தில் மென்மேலும் உயர வேண்டும், என் றார். இந்நிகழ்வில், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், உதகை நகர்மன்றத் தலைவர் வாணீஸ்வரி, குன் னூர் நகர்மன்றத் துணைத்தலைவர் வசீம் ராஜா உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

கோவையிலிருந்து ஹவாலா பணம் கடத்தல்

கோவை, ஜன.22- கோவையிலிருந்து கேரள மாநிலம், பாலக்காட்டிற்கு காரில் ரகசிய அறை அமைத்து, கடத்த முயன்ற ரூ.1.90 கோடி  ஹவாலா பணத்தை கேரள போலீசார் பறிமுதல் செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், புதுச்சேரி குருடிக் காடு என்ற இடத்தில் கேரள போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவையிலிருந்து பாலக்காடு  நோக்கி வந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிற்கா மல் வேகமாக செல்லவே, அந்த காரை போலீசார் விரட்டிப்  பிடித்தனர். காரில் இருவர் இருந்த நிலையில், வாகனத்தை  போலீசார் சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்க ளின்றி வாகனம் இயக்கப்பட்டதும், காரில் இருக்கைக்கு கீழே  ரகசிய அறை அமைத்து அதில் ரூ.1.90 கோடி ஹவாலா பணம்  பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த வர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். காரில் இருந்தவர் கள் கேரள மாநிலம், மலப்புரம் அங்காடிப்புரத்தைச் சேர்ந்த  முகமதுகுட்டி மற்றும் புத்தனங்காடியைச் சேர்ந்த முகமது  நிசார் என்பது தெரியவந்தது. மேலும், கோவையிலிருந்து ஹவாலா பணத்தை மலப்புரம் பகுதியில் உள்ள ஒருவரி டம் ஒப்படைக்க கொண்டு சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், கோவை யில் ஹவாலா பணத்தை கொடுத்தவர், மலப்புரத்தில் பணத்தை பெறுபவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேலோ இந்திய போட்டிகள் – 2024 தமிழக மகளிர் கூடைப்பந்து அணி அபாரம்

கோவை, ஜன.22- கோவையில் திங்களன்று கேலோ இந்தியா விளையாட்டு  போட்டி தொடரில், தமிழ்நாடு மகளிர் கூடைப்பந்து அணியினர்  அபார வெற்றி பெற்றனர். கேலோ இந்தியா போட்டி தமிழ்நாட்டில் 4 மாவட்டத்தில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவையில் ஞாயி றன்று தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான திங்களன்று, தமிழக  மகளிர் கூடைப்பந்து அணி கேரளா அணியுடன் மோதியது.  இதில், தமிழக மகளிர் அணி வீராங்கனைகள் போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். தமிழக அணியி னர் நேர்த்தியாக விளையாடி எளிதாக புள்ளிகள் சேர்த்தனர்.  நான்கு சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய தமிழக மகளிர் அணி, போட்டியின் இறுதியில் 91 புள்ளிகள் பெற்று வெற்றி  பெற்றது. கேரளா அணி 59 புள்ளிகள் பெற்றது.