districts

img

ராயல் கேர் மருத்துவமனையில் பூஞ்சை ஒவ்வாமை நோய் கருத்தரங்கம்

கோவை, டிச.17- ராயல் கேர் சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி மருத்துவமனையில் நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை (அஸ்பெர்கில்லோ சிஸ்) நோய் குறித்த சிறப்பு பயிற்சி  கருத்தரங்கம் நடைபெற்றது.   

கோவையிலுள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவம னையின் இண்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மெடி சின் துறை சார்பில் அலர்ஜிக் பிராங்கோபல்மனரி அஸ் பெர்கில்லோசிஸ் (Allergic Bronchopulmonary Aspergillosis - ABPA மூச்சுக்குழாய் பூஞ்சை ஒவ்வாமை) மற் றும் க்ரானிக் பல்மனரி ஆஸ்பெர்கில்லோசிஸ் (Chronic Pulmonary Aspergillosis - CPA நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை  ஒவ்வாமை) பற்றிய ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் மருத்துவ மனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், நுரையீரல் துறை யின் முக்கிய நிபுணர்களான வி.ஆர். பட்டாபிராமன், ரிதேஷ்  அகர்வால், இந்தர்பால் சிங் சேகல் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். ராயல் கேர் மருத்து வமனை இண்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் ஸ்லீப்  மெடிசின் துறை ஆலோசகர்களான. வி.ஆர். பட்டாபிராமன், எஸ்.மகாதேவன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.