உடுமலை, ஆக. 22 - மடத்துக்குளம் தாலுகா பேருந்து நிலை யம் குப்பை கிடங்கு போல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், தனி யார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி யுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாவதா கவும், இதை அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் உடுமலை, பழனி, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கிறது. இந்நிலை யில், பேருந்து நிலையத்திற்கு உள்ளே பல ஆண்டுகளாக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளே வராமல் தேசிய நெடுச்சாலையில் மட்டுமே நின்று சென்று வந்தது. இதை கண்டித்தும், பராம ரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேருந்து நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பேருந்து நிலையத்தில் பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், வெளி மாவட்ட பேருந்துகள் உள்ளே வந்து செல்ல தொடங்கியது. இப்படி பல போராட்டம் நடத்தியதன் விளைவாக நடைமுறைக்கு வந்த பேருந்து நிலையம், தற்போது குப்பை மேடாகவும், தனியார் வாகனம் நிறுத்துமிடமாகவும் மாறி யுள்ளது. மேலும், சில தனியார் நிறுவன வாக னங்கள் விதி முறையை மீறி பேருந்து நிலை யத்தின் உள்ளே, பேருந்து நிறுத்தும் இடத் தில் தங்கள் நிறுவனங்களுக்கு வேலைக்கு வரும் ஆட்களை ஏற்றி, இறக்கி விட்டு செல்கி றார்கள். இதானால் வெளி மாவட்டங்க ளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளே, வெளியே செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், எந்த பேருந்து, எங்கு நின்று செல்கிறது என்று தெரியாமல் பய ணிகள் குழப்பம் அடைகின்றனர். இது குறித்து பயணிகள் சிலர் தெரிவிக் கையில், பல கட்ட போராட்டத்திற்கு பிறகு இப்பொழுது தான் சர்வீஸ் வண்டிகள் பேருந்து நிலையத்தின் உள்ளே வருகிறது. ஆனால், தனியார் கார் மற்றும் வேன்கள் பேருந்து நிலையம் முழுமைக்கும் நின்று இருப்பதால், கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் எங்கு நின்று செல்கிறது என்று தெரிவதில்லை. இதனால், நாங்கள் சரியான நேரத்தில் பேருந்துகளில் ஏற முடியாமல் அவதிக்குள்ளாகிறோம். மேலும், இந்த பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில் நிலையதிற்கு செல்ல முடி யாத வகையில் தனியார் வாகனங்கள் ஆக்கி ரமித்து உள்ளன. பேருந்து நிலையத்தில் சுகா தாரம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. எந்த கழிவறைக்கும் கதவுகள் இல்லை, தண்ணீர் வருவதில்லை. இத னால் கழிப்பறைகளை பயன்படுத்த முடிய வில்லை. மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கழிவறை கட்டிய நாள் முதல் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளது என்ற னர். உடுமலை, பழனி தேசிய நெடுஞ்சாலை யில் இருக்கும் மடத்துக்குளம் பேருந்து நிலை யத்தின் அருகில் மடத்துக்குளம் காவல் நிலை யம், நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் என அனைத்து அரசு துறை அலுவலகங்களும் உள்ள நிலையில், பேருந்து நிலையத்தில் இருக்கும் குப்பைகளையும், தனியார் வாகனங்களை யும் அகற்ற முடியாத நிலை ஏன் என்று தெரிய வில்லை. தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பயன்படுத்தும் மடத்துக்குளம் தாலுகா பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்கும் வகையில் தேங்கி உள்ள குப் பைகளையும், தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என் பதே பயணிகளின் கோரிக்கையாக உள் ளது.