districts

img

முன்கள பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

கோவை, மே 6- கோவை சாய்பாபா காலனியில் முன்கள பணி யாளர்களுக்கு  இலவச முழு உடல் பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெள்ளியன்று துவக்கி வைத்தார். ‘நோய் வரும் முன் காக்க’ முழு உடல் பரிசோதனை அவசியம் என்பதை வலியுறுத்தி ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மற்றும் ஏஜிஎஸ் மாஸ்டர் ஹெல்த்  செக் அப் மையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, குடும்பத்தினரின் பொருளாதா ரத்தையும், உணர்வுகளையும் காக்க இலக்காக கொண்டு இம்மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா காலத்தில் முன் களப் பணியாற்றிய பத்திரிகையாளர் களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாமை நடத்த ஏஜிஎஸ் மருத்துவ மையம் மற்றும் கோவை பத்திரி கையாளர் மன்றம் முன் வந்தன. இதையடுத்து வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் களுக்கு ரத்த பரிசோதனை, ரத்த  அழுத்தம், சர்க்கரை பரிசோதனைகள் மற்றும் இ.சி.ஜி மேற்கொள்ளப்பட்டன.