கோவை, ஜன.5- தமுஎகச இலக்கியச் சந்திப்பு நிகழ் வில், பத்மஸ்ரீ விருது பெற்ற எம்.பத்திரப் பனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில், ஞாயிறன்று இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி, கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. கவி ஞர் வி.விஷ்ணு தலைமை வகித்தார். இ.வெ.வீரமணி, தஞ்சை தமிழ்வாணன் ஆகியோரின் பாடல்களுடன் நிகழ்ச்சி துவங்கியது. கவிஞர் விவேகானந்தன் வரவேற்றார். தமுஎகச மாவட்ட செயற் குழு உறுப்பினர் தங்க முருகேசன் துவக் கவுரையாற்றினார். இதையடுத்து பத் மஸ்ரீ விருது பெற்ற வள்ளி கும்மி உள் ளிட்ட நாட்டுப்புற கலைகளை வளர்த் தெடுத்து வரும் எம்.பத்திரப்பனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமுஎ கச மாவட்டத் தலைவர் தி.மணி பாராட்டி உரையாற்றினார். பத்மஸ்ரீ எம்.பத்திரப் பன் ஏற்புரையாற்றினார். தொடர்ந்து, பொங்கல் சிறப்புக் கவியரங்கம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற இளம் கவி ஞர்கள் கவிதை வாசித்தனர். மாவட்டச் செயலாளர் அ.கரீம், மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வி.கோ. பொன்னுசாமி நன்றி கூறினார்.