தருமபுரி, பிப்.6- இட்லப்பட்டி கிராம மக்களுக்கு அதிகாரிகள் அளித்த வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலு வலர் பால்பிரின்சிஸ்லி ராஜ்குமாரி டம் மனு அளித்தனர். இதுதொடர்பாக அம்மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட் டம், மாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இட்லப்பட்டி கிராமத்தில் போயர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள நிலத்தை சாதி ஆதிக்க சமூகதைச் சேர்ந்த நபர் அண்ணாமலை என்பவர், 1962 ஆம் ஆண்டில் முறைகேடாக பத்திரப் பதிவு செய்துக்கொண்டார். மேலும், போலி பத்திரத்தை வைத்துக் கொண்டு போயர் சமூக மக்களை வீட்டை காலிசெய்யும்படி தொடர்ந்து மிரட்டி வருகிறார். இதனிடையே 9 குடும்பங்களுக்கு புதியதாக மனைப் பட்டா 2019 ஆம் ஆண்டில் கொடுக் கப்பட்டும், அளந்து அத்து காட்டப்பட வில்லை. இந்த நிலத்தினையும் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகிறார். இதனை கண்டித் தும், அப்பகுதி மக்களுக்கு அடிப் ை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் தலை மையில் அப்பகுதி பொதுமக்கள் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். 5 நாட்கள் நீடித்த இப்போராட் டத்தின் முடிவில், அரசு அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, அதிகாரிகள் அளித்த வாக்குறுதிபடி குடியிருப் புக்கு மனைப்பட்டா மற்றும் அப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன் னதாக, இந்நிகழ்வில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, ஒன்றிய நிர்வாகிகள் கே.கும ரேசன், சொக்கலிங்கம், வேலாயுதம், தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.