districts

img

பாஜக பிரமுகரின் அதிகார மமதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

கோவை, மார்ச் 2- தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் பொதுச்செய லாளர் கே.சாமுவேல் ராஜு விற்கு கொலை மிரட்டல்  விடுத்த பாஜக நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை  எடுக்க கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவ லகம் முன்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  கோவை சதாப்தி  ரயிலில் முதியவரிடம், பாஜகவின்  நாராயணன் திருப்பதி அராஜகமாக  நடந்து கொண்டார். இதனை தட்டிக் ்கேட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜுடமும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார்.  அதிகார மமதையோடு நடந்து கொள்ளும் பாஜக பிரமுகரை கண்டித் தும், கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.   கோவையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட செய லாளர் ஆறுச்சாமி தலைமை தாங்கி னார். இதில், புரட்சிகர இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் மலரவன், மகஇக மாவட்ட செய லாளர் மூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் நேருதாஸ், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொறுப்பாளர் காசு நாகராஜ்,  ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ரவிக்குமார்  ஆகி யோர் கண்டன உரையாற்றினர். நிறை வாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச்செயலாளர் யு.கே.சிவ ஞானம் கண்டன உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.