உடுமலை, டிச.12- உடுமலை முதற்கிளையில் மாதிரி நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடை பெற்றது. உடுமலை முதற்கிளையில் மாதிரி நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா விற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் க.லெனின்பாரதி தலைமை வகித்தார். நூலகர் அ.பீர்பாஷா முன்னிலை வகித் தார். நூலக வாசகர் வட்ட நிர்வாகி கே.விஜயகுமார் வர வேற்புரை ஆற்றினார். இப்பயிற்சி வகுப்புகளை திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள் எஸ்.முத்துக் குமாரசாமி, கே.சுப்பிரமணியம், வி.கண்டிமுத்து, எம்.தண்ட பாணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நூலக வாசகர் வட்ட பொருளாளர் எஸ். சண்முகசுந்தரம் நன்றி கூறினார். இந்த இலவச பயிற்சி வகுப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.