districts

img

விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா

நாமக்கல், டிச.21- விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு  அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் தாலுகாவில் ஏராள மான விவசாயத் கூலித் தொழிலாளர்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் பல காலமாக சொந்த வீடுகள் இல்லாமலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா நிலம் கேட்டு, விதொச சார்பில் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், தொடர்ந்து இயக்கங்களும் நடத்தி  வருகின்றனர்.  இதன்தொடர்ச்சியாக, விவ சாய கூலித்தொழிலாளர்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி நாமக்கல்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.துரைசாமி தலைமை வகித்தார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்க சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஏராளமானோர் பங்கேற் றனர். முடிவில், விவசாய தொழி லாளர் சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் நன்றி கூறி னார்.