திருப்பூர், ஜன. 8 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு மாநகரம், வ.உ.சி.நகர் கிளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை, ஸ்ரீ குமரன் மருத்துவமனை இணைந்து ஞாயிறன்று இலவச மருத்துவ முகாமை நடத்தினர். வ.உ.சி.நகர் வாலிபர் சங்கக் கிளைத் தலைவர் பி. சதீஸ்குமார் தலைமை வகித்தார். வாலிபர் சங்க முன்னாள் கிளைத் தலைவர் எஸ்.முத்துக்குமார், வாலிபர் சங்கத் தைச் சேர்ந்த ராஜ்குமார், மதிவாணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வ.உ.சி.நகர் கமலம் திருமண மண்ட பத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் திருவுருவப் படத்தை சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் முன்னோடி எஸ்.ராம சாமி திறந்து வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் விவேக், மாநகர துணை செயலாளர் நளின் குமார், மாநகர குழு உறுப்பினர்கள் மனோஜ், சுபாஷ் ஆகி யோர் பங்கேற்றனர். இம்முகாமில் மொத்தம் 9 பயனாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு கோவைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் 30 பயனாளி களுக்கு முகாமிலேயே கண் கண்ணாடி வழங்கப்பட்டது.