districts

img

விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்: வி.செந்தில் பாலாஜி

கோவை, ஜூன் 12- அமித்ஷா வருகையின் போது மின்வெட்டு ஏற்பட்டது தற்செய லான நிகழ்வுதான். துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு,  உடனடியாக அது சரிசெய்யப்பட் டது என அமைச்சர் வி.செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். கோவை - மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி பகுதி யில் உள்ள எம்ஜிஆர் மொத்த மார்க் கெட்டில் கூடுதல் அபிவிருத்தி பணி களை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதனைத்தொ டர்ந்து அமைச்சர் வி.செந்தில்பா லாஜி செய்தியாளர்களிடம் பேசு கையில், கோவை மாநகராட்சியின்  பழுதடைந்த சாலைகள் புதிய தார்ச் சாலைகள் அமைக்க 200 கோடி ரூபாய் சிறப்பு நிதிகள் வழங்கப் பட்டது. முதல்வர் அறிவிப்பு வெளி யிடப்பட்டு தொடர்ந்து பல்வேறு  பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நிறைவுற்று மக்கள் பயன் பாட்டுக்கு வந்துள்ளன. இன்று புதி தாக முதல்வர் ஆணைக்கிணங்க ஏறத்தாழ 173 கிலோ மீட்டர் அளவி லான சாலை அமைக்கக்கூடிய பணி களில் 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பணிகள் தொடங்கப்பட உள் ளது.

ஒட்டுமொத்தமாக 200 கோடி  ரூபாய் சிறப்பு நிதியும், முதல்வர் அறிவிப்பில் மேலும் 60 கோடி என, ஏறத்தாழ 260 கோடி ரூபாய் கூடுத லாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கப்பட்டு கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார். 578  கிலோமீட்டரில்  சாலை அமைக்கப் பட்டு வருகின்றது.  மேலும், அண்ணா மற்றும் எம்ஜிஆர் என இரண்டு மார்க்கெட் பகுதிகளிலும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு களில் ஒட்டுமொத்தமாக 1157 சாலைகள்,  578 கிலோமீட்டர் ரூ250 கோடி மாநகராட்சிகள் மட்டும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைதுறையை  பொருத்த வரைக்கும் 36 கிலோ மீட்டர் சாலை, 140 கோடி ரூபாய் இந்தப் பணிகள் இரண்டு மாதத்திற்கு முடிக்கப் படும், என்றார். மின்சார கட்டணம் குறித்த கேள் விக்கு மின்வாரியம் சார்பில் மிகத் தெளிவான விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. வீடுகளுக்கு எந்தவித மின் கட்டணம் உயர்வும் இல்லை,  ஏற்கனவே நடைமுறையில் உள்ள மின் திட்டங்கள் விசைத்தறி, கைத் தறி வழங்கக்கூடிய இலவச மின்சா ரங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியும் அரசு சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. சிறிய அளவி லான மாற்றங்கள் என்பது ஒன்றிய  ரசு மின்சார ஒழுங்கு முறை  ஆணையத்திற்கு வலியுறுத்தி ஆண் டுக்கு ஏற்படுகின்ற செலவின அடிப் படையில் இந்த கட்டண மாற்றம்  ஏற்பட்டுள்ளது. இதனாலேயே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள் ளது. 

அமித்ஷா வரும்பொழுது மின் வெட்டு குறித்த கேள்விக்கு, ஒரு  குற்றச்சாட்டை  கூறினால்,  அரசிய லுக்காக, எதையோ  மனதில் வைத் துக்கொண்டு கூறுவம் குற்றச்சாட்டு சரியா? தவறா? என  ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  மின் வெட்டு  பாதிப்பு உள்ளதா? சென்னையில் நடைபெற்றது தற்செயலானது. துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறை உடனடியாக 40 நிமி டத்தில் சரி செய்யப்பட்டு சீரான மின் விநியோகம் தரப்பட்டது.  பொதுவா கவே சென்னையில்,  கோவையில்  சொல்லக்கூடிய கருத்து, குற்றச் சாட்டு சரியாக? தவறா? என  ஆராய்ந்து பார்க்க வேண்டும்.அன்பு ணி,  2 லட்சம் கோடி டாஸ்மாக்கில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என தெரி வித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்தில் விற்பனை 45 ஆயி ரம் கோடி தான்,  இரண்டு வருடத் தில் 83 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. அப்படி இருக்கும்  போது, இரண்டு லட்சம் கோடி இழப் பீடு எப்படி ஏற்பட்டது.  நீங்கள் அவர் களிடம் கேள்வி கேட்பதில்லை. மழைக்காலங்களில் மாநகராட்சியை பொறுத்தவரை,  மேயர் தலைமை யில், ஆணையர் அதிகாரிகள் பல் வேறு காலகட்டங்களில் எந்தெந்த சிறப்பு பணிகள் செய்ய வேண்டும் என பட்டியலிட்டு செய்து வருகி றார்கள்.உடனடியாக சிறப்பு கவ னம் கொண்டு மேம்படுத்தப்படும்,  முன்பு இருந்த அளவுக்கு மழை பாதிப்பு இருக்காது, என்றார்.  முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த் குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.