districts

img

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

திருப்பூர், ஜன. 3 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் தொகுதி 4 தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்பை திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெள்ளியன்று தொடக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வேலை வாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இந்த இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கிராம நிர் வாக அலுவலர், இளநிலை உதவியா ளர், பில் கலெக்டர், தட்டச்சர் மற்றும்  சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணி களுக்கான தொகுதி 4 தேர்வு அறிவிப்பு  ஏப்ரல் 24 அன்று வெளியிடப்படவுள் ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற  இலவச பயிற்சி வகுப்புகளின் வாயி லாக குடிமைப் பணிகள்  தொகுதி 4 தேர் வில் 18 தேர்வர்களும், தொகுதி 2ஏ தேர் வில் 13 தேர்வர்களும் தேர்ச்சி பெற்று அர சுப்பணிவாய்ப்புப் பெற்றனர்.  அதன் தொடர்ச்சியாக நடப்பாண் டில் ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் சார்பில் நடை பெறவுள்ள தொகுதி 4 தேர்விற்கான இல வசப் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கப் பட்டுள்ளதாக ஆட்சியர் கிறிஸ் துராஜ் குறிப்பிட்டார். விரைவில் இரு பயிற்சி மையங்கள் மேலும், விரைவில் உடுமலைப் பேட்டை நகராட்சி பள்ளி  வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் பயிற்சி மையத் தில்  விரைவில் தொகுதி 4 தேர்விற்கான  இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப் படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் வட்டார வளர்ச்சி அலு வலக வளாகத்தில் போட்டித் தேர்வுக் கான மூன்றாவது பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  7-ஆவது தளத்தில் உள்ள போட்டி  தேர்வர்களுக்கான நூலகத்தில் தற் போது போட்டி தேர்வர்களுக்கான புதிய புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள் ளும் தேர்வர்கள் இப்புத்தகங்களை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற லாம் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர், மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) ஆ.ஜோதிமணி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ், தேர் வர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.