அவிநாசி, செப்.12- அவிநாசியில் அரசு வேலை வாங்கித் தரு வதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை வெள்ளியன்று காவல் துறையி னர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி பொன் னாடம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்தாவூத் மகன் சலீம் (24).
இவர் தற்போது அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் குடியிருந்து வருகி றார். இந்நிலையில், இவர் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி அதே பகுதி யைச் சேர்ந்த நல்லமுத்து (34) என்பவரிடம் ரூ.6 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், கூறிய படி அரசு வேலை வாங்கி தராததால் நல்ல முத்து பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
அப்போது, லாரியை ஏற்றி கொன்று விடுவ தாகவும் சலீம் மிரட்டியதாக கூறப்படு கிறது. இதையடுத்து, நல்லமுத்து அவிநாசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் சலீமிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சலீம், நல்லமுத்துவிடம் ரூ.6 லட்சம் பெற் றது தெரியவந்தது. இதேபோல், வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரிடமும் ரூ.13 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவிநாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சலீமை வெள்ளி யன்று கைது செய்தனர்.