districts

img

திருப்பூர் நஞ்சராயன் குளக்கரையில் மோசடி நில விற்பனையை ரத்து செய்ய வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 10- திருப்பூர் நஞ்சராயன் குளக்கரை யில் உள்ள நீர் நிலை தன்மையை கொண்ட 50 கோடி ரூபாய் மதிப் புள்ள 9 ஏக்கர் நிலத்தை ஒன்றரை கோடி ரூபாய்க்கு தமிழ்நாடு அரசு  விகாஸ் சேவா டிரஸ்டிற்கு விற்பனை  செய்ததை ரத்து செய்து, அந்த இடத்தை நீர் நிலையாக வகைப்பாடு மாற்றம் செய்யவும், அந்த நில விற் பனையில் நடைபெற்ற ஊழல் மீது  நடவடிக்கை எடுக்கவும் நஞ்சராயன்  குளம் பாதுகாப்பு இயக்கம் வலியு றுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர்  மாநகரம் மற்றும் ஊத்துக்குளி வட்டத் தில் 440 ஏக்கர் பரப்பளவில் நொய்யல்  ஆற்றின் துணை ஆறான நல்லாற் றின் குறுக்கே, திருப்பூர் மாவட்டத் தின் மிகப்பெரிய ஏரியான நஞ்சரா யன் குளம் அமைந்துள்ளது. தமிழ் நாட்டின் 17ஆவது பறவைகள் சரணா லயமாக தமிழ்நாடு அரசால் கடந்த  ஏப்ரல் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள் ளது. 181 பறவை இனங்கள், 40  வகை பட்டாம்பூச்சிகள், 76 வகை  தாவரங்கள், 11 வகை நீர்வாழ் உயிரி னங்கள் மற்றும் 16 வகை பூச்சி இனங் களுக்கு வாழிடமாகவும், வெளி நாட்டு பறவைகள் வலசை பாதையில் தங்கி செல்லும் இடமாகவும், 800 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குளம் இயங்கி வருகிறது. 40 ஆண்டுக ளுக்கு முன்பு வரை அப்பகுதி மக்க ளுக்கும், விவசாயிகளுக்கும் மிகப் பெரிய நீராதாரமாகவும் இந்த குளம் விளங்கி வந்தது.

தற்போது இந்த குளத்தின் கரை யில் இருந்து சாலை வரை 50 கோடி  ரூபாய் மதிப்புள்ள ஒன்பது ஏக்கர் நிலத்தை வெறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கு குளத்திற்கு எதிரில் இயங்கிவரும் விகாஸ் வித்யாலயா பள்ளியை நடத்திவரும் விகாஸ் சேவா டிரஸ்டிற்கு தமிழ்நாடு அர சால் அளிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் தற்போது குளக்க ரையிலிருந்து சாலை வரை நீர்வழிப் பாதைகளை மறித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறது. ஏரி யின் நீர் கசியும் பகுதியாகவும், இரண்டு மதகுகளிலும் இருந்து நீர் வெளியேறி செல்லும் இடமாகவும், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் வசிக்கும் பகுதியாக உள்ள இடத்தை  நீர் நிலையாக, பறவைகள் சரணால யத்தின் ஒரு பகுதியாக அறிவிப்பு  செய்யாமல் ஏரியின் கரை முதல் கொண்டு அடிமாட்டு விலைக்கு தனி யார் பள்ளிக்கு தாரை வார்க்கப்பட் டது திருப்பூர் மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. எனவே, விகாஸ் சேவா டிரஸ்ட்  அமைப்பிற்கு அடிமாட்டு விலைக்கு  50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை  விற்பனை செய்ததை ரத்து செய்யக் கோரியும், மேற்படி நிலத்தை நீர் நிலையாக வகைப்பாடு செய்யக் கோரியும், நில விற்பனையில் நடை பெற்றுள்ள ஊழல் மீது உரிய நடவ டிக்கை எடுக்க கோரியும் திருப்பூர் மாநகர, மாவட்ட பொது மக்கள் மற் றும் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற உள்ளது.