districts

img

கூடைப்பந்து அரை இறுதி சுற்று: நான்கு மாநிலங்கள் தகுதி

கோவை, ஆக. 22- கோவையில் நடைபெற்ற பிஎஸ்என் எல் ஊழியர்களுக்கான கூடைப்பந்து கால் இறுதி போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஒரிசா அணி கள் வெற்றி பெற்று அரை இறுதி சுற் றுக்கு தகுதி பெற்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி யாற்றி வரும் ஊழியர்களுக்கான 20 ஆவது அகில இந்திய பிஎஸ்என்எல் இரண்டாம் நாள் விளையாட்டு போட்டி கள் வியாழனன்று கோவை வஉசி  மைதானத்தில் துவங்கியது. வியாழ னன்று நடைபெற்ற கைப்பந்து கால் இறுதி போட்டிகளில் தமிழ்நாடு அணி  அசாம் அணியை 2-0 என்ற நேர் செட்களி லும், கர்நாடக அணி உத்திரபிரதேச மேற்கு அணியை 2-0 என்ற நேர் செட்களி லும், ராஜஸ்தான் அணி உத்திரகாண்ட் அணியை 2-0 என்ற நேர் செட்களிலும் மற்றும் இமாச்சலபிரதேச அணி பீகார்  அணியை 2-1 என்ற செட்களிலும் வென் றன. அதனை தொடர்ந்து கூடைப்பந்து கால் இறுதி போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஒரிசா அணிகள் வெற்றி பெற்று அரை இறுதி  சுற்றுக்கு தகுதி பெற்றன.